வரம் தருவாய் எங்கள் ஈழம் வாழா
வாழ்க தலைவன் வாழ்க தேசம் என
சொல்லிடு நாவினில் வலிமை தாராய்
ஜகம் காப்பாய் நீ ஜனனி
பாரினில் போற்றுவார் நீ சக்தி
கானமதில் காமாட்ச்சி என்பர் ஒரு
கமலமதில் வரமொடு சொல் லெடு
தருவாய் இல்லம்! தாராய் என இன விடுதலை!
காண்பார் கேட்பார் சொல்வார்
என் தேசம் - கடையில் பொய்
என உரைத்திடுமோ நின் சக்தி
காப்பாய் அருள்வாய் கருணையோடு
கண்திறவாய் அகம் எழு பரிபூரணி
நெல்லில் ஏட்டெழுதி கலைவாணி நினைதொழுதே
சரீரமோடு வேப்பிலை தனயுடுத்தி அகமகள்
உயிர் காப்பாய் யென் றினைந்தோம்
தலையோடு குடமெடுத்து பலதோத்திரம் தனயுரைத்து
கண்ணீர் கசிந்து பல் கோயில் கட்டி உனை தரித்தோம்
வழி கொடு உன் பிள் வாழ்விற்க்கு
அகம் துணை நில்
வல்லமை கொடு
பொருளோடு சொல் தா
பொறுப்பில்ல மானிடம் மாற்று
பரிபூரண சக்தி கொடு பாரினில் எம்
பச்சயினம் வாழ வழி செய்வாய்
தோற்றுவாய் வருவாய் அகிலம் காப்பாய்
பாடி நின் பாதம் தொழுது
நின்னொடு கலை பயின்று
செவி நா பசி தொடுத்து விரதம் தனை காத்து
நின் திருவடி கேட்டு நின்றோம்
இல் அகற்றி உறவ கற்றி பசி தனை கொடுமை செய்
எம் பாவம் தீர் அம்மா எம் விடுதளை கொடு
கொள் உயிர் உனக்கென பிறப்பொடு வாழ்
நீ தருவாயென நம்பிடு இனம் தனை
பரம்பொருள் பிழை அகற்றி யென விதி செய்
கவியோடு கலையெடுத்து நின்
திருவடி சேர்ப்பின் களிப்பொடு விடை கொடு தாயே

வேண்டும் வேண்டும் துணை நீ வேண்டும் அம்மா
பிரிவில்லா என் இனம் பிரிவொடு ஈழம் பெற
மனத்தோடு உறுதி வேண்டும்
நெஞ்சொடு நேசம் வேண்டும்
அவசரமில் சிந்தனை வேண்டும்
அவசியம கனவு வேண்டும்
எடுகோள் பயன் பெற வேண்டும்
அகிலமொடு எம் ஒலி சேர வேண்டும்
சொல்லொடு நீதி வேண்டும்
செப்பு நாவில் உண்மை வேண்டும்
வன்பில்லா சேர்மானம் வேண்டும்
கட்டொடு உணர்வு வேண்டும்
கட்டிலா வீரம் வேண்டும்
தரணி எதிர் புத்தி வேண்டும்
பெண்ணொடு நிகர் வேண்டும்
அறிவோடு அரசியல் வேண்டும்
கள்ளமில்லா அன்பு வேண்டும்
கருணையோடு ஞானம் வேண்டும்
கொடு என செல்வம் வேண்டும்
நல் வழி நீ காட்டிட வேண்டும்
தருவாய் பராசக்தி! அருள்வாய் ஓம் சக்தி!
வெள்ளைப் பூவில் செங் கமலத்தில்
சிம்ம வாகினியாய் அழகொடு வடிவெடுத்து
அமைதி காண ஆசி கொடு
தரணி தடுக்கும் அகிலம் கெடுக்கும்
பார் பறிக்கும் என் தேசக் கண்ணீரை
பரி வோடு துடைத்தெடு
எழுவாய் தேவி வருவாய் தேவி
காப்பாய் தேவி அருள்வாய் தேவி
கல் அகற்றி உன் சக்தி காட்டி
அவதியொடு அல்லல் தொடும் என் இனம் காக்க

No comments:
Post a Comment