Sunday, 31 May 2009

பனையோடு விளையாடி.. அத்தியாயம் 4

[காத்தோட கேட்டதென்ன கரையோட போனதென்ன வெட்டினவ உறவென்னா ஒன்னு எலவு இன்னொன்னு அவ உசிரு - வாரது ஒரவ வெட்டிவிட்ட ராசம்மா வாச்சே]




கையில ஒன்னு இடுப்பில ஒன்னு சுமயாக்கிடக்கயில அவிழப்போற தாலி கூடவே சேக்குது சுமைய, இடுப்பில கிடந்தவாணிய திண்ணயில கிடத்தீட்டு சிவப்பீட காலில கிடந்தது குளரயில பக்கத்துவீட்டோட சேந்த ஊரெல்லாம் கூடுது முத்தத்தில.

"ஐயோ என்ட கடவுளே... புருசனைக் குடுத்திட்டு, இந்த ரெண்டையும் எப்பிடி கர சேக்கப்போரனோ"
காத்தில கத்தினதில அவிழுது தாலி.

பொசுக்கின்னு எழுந்து மடிப்பில முடிஞ்ச்சு கிடந்த சேலத்தலப்ப விசுக்கின்னு எடுத்து கண்ணையும் மூக்கையும் துடச்சுப்போட்டு நடந்ததெல்லாம் சொல்லப்போகயில வேர்த்துப்போன சிவப்பியர் அரஉசிரா சாயிராறு திண்ணயில, நடந்தது என்னென்னு தனக்குள்ளேயே அறிஞ்சிட்டு தலயில அடிச்சு அழுராவு மகமாயி, நடக்கிறதையெல்லாம் நெலவபாத்த கிளி மாதிரி பாக்கிராக வீட்டில இருந்த அரக்கச்சட்டையும் அழுக்குப் பாவாடையும்.

நடந்தத தெரிஞ்சுக்காம சிக்குப்பிடிச்ச தலேக்குள்ள கையவிட்டு தேடினது போகயில பரிதமாப்போச்சு தமிழப்பாத்த ஊருக்கு, சின்னவ கலைவாணி பெரியவ தமிழ்வதனா, பேர மட்டும் விதியெண்னோட கூட்டித்தான் வெச்சாக, இப்போ உதுகள் ரெண்டும் தலவிதியத் தேடித்தான் பாக்கோணும்.

அதிஷ்டமும் அறுவையும் கேட்டு வாங்க முடியாது, செல்லத்தாயி அனுபவிச்சு சொல்லுறதும் இதத் தான்.
போனதையெல்லாம் கண்ணீரோட புதச்சிட்டு வாயில வார்த்தயெடுக்கயில மூடிக்கிடந்த படலயோட வாயி மெல்லமாத் திறக்குது மறுபடி, அரஉசிராக் கிடந்த சிவப்பியருக்கு நெஞ்சில விழுது அடி,

சிவப்பியண்ணே சத்தத்தோட முத்தத்தில கூடிக்கிடந்த சனத்தயெல்லாம் விலக்கீட்டு மூஞ்ச காட்டினின்னு சொன்னாரு
"ஊரோட கூடிக்கிடக்கு உருவத்தம்மன் கோயில், மட்டுமுனயில இருந்து வார சனத்தயெல்லாம் எங்க ஊருப்பாத்து திருப்பி விடுதுக மாணவர் அமைப்புக, வார சனத்தயெல்லாம் பந்தல்ல இருக்க வெச்சு வாரன் உங்களிட்ட"

பேச்சு முடியயில கை நீழுது மேட்ச்சட்டயோட, மங்கம்மா கையில கிடந்த சட்டய அவசரமா வேண்டி அரவாசிய போட்டிட்டு கண்ணீரோட நின்ன ராசம்மவ கொஞ்சமா சமாதானப்படுத்தீட்டு ஏறுறாரு சைக்கிள்ல மிதிக்கிராறு செல்லயர்.

கூட நின்ன கூட்டமெல்லாம் ராசம்மா கையில ஒன்னு தலயில ஒன்னு முதுகில ஒன்னு தடவிநின்னு திண்ணயில இருக்கவெச்சு சமாதானஞ் சொல்லயில, தள்ளி நின்ன தமிழயும் பக்கத்தில கிடந்த வாணியையும் கையில ஒன்னு இடுப்பில ஒன்னு துக்கிவேச்சு தர தரென்னு உள்ள போயி தீத்திராவு அவிச்சு வெச்ச புட்ட

கடலப்பாத்த மல மாதிரி நடக்கிறதையெல்லாம் பாத்து நின்ன கலைக்கும் சுகுமாரனுக்கும் நடக்குது அறிமுகம்

"டேய் என்னடா பாக்கிறீங்க உவ தாண்டா உங்க அத்த, இதுக ரெண்டும் உங்களுக்கு மச்சாள் முறை தமிழ், வாணி, இவ்வளவு காலமும் மட்டுமுனயில இருந்தாங்க இனி இங்கதான் இருப்பாங்க"

தமிழப் பாத்தா கலைக்கு என்னமோ ஒரு சந்தோசம், இதுல வேற இனி இங்க தான் இருக்கப்போரங்க என்டதும் வாய் கொஞ்சம் கூடவா நீழுது.

அழுதுநின்ன தமிழா சாப்பிட்ட கையோட ஒருகையில கலை பிடிக்க, இடுப்பில கிடந்த வாணிய மாறன் வாங்க இருட்டோட சேரப்போகுது இவக விளையாட்டு, நடக்கிறதா புரியிற வயசு மாறனுக்கு மட்டும் தான், மத்துகள் எல்லாம் ஏதோ நடக்குது ன்னு நினச்சிட்டு தங்க வேலயோட சேர்ந்திட்டாக.

திண்ணயில தொடருது குளறல் சத்தம் சத்தங் கேட்டு வார சனமெல்லாம் வஞ்சனயில்லமா வைக்குது ஒப்பாரி, நடந்ததையெல்லாம் தெரியாம நின்ன சனத்துக்கு புளியமரத்தின நின்ன பேயொன்னு சொல்லுது இவக கதைய.


****************************************


கண்ணீரோட பேசீட்டு, உறங்கப்போன சத்தத்தையும் நித்திர கொள்ளுற சந்துகளையும் எழுப்பவேண்ணாமேன்னு சத்தமில்லாம போகுது சைக்கிள், எழுப்பினாலும் பரவல்லேன்னும் நிலமா சொல்லுது சிவப்பியருக்கு, சந்து பொந்து தாண்டி ஊருக்கு போட்ட கருப்பு வீதியைத் தேடுது செல்லயரோட சைக்கிள். உருவத்தம்மன் கோயில் திருவிழாக்குப் போட்ட வெளிச்சத்த தாண்டி கண்ணையே கூசுது வண்டிகளோட வெளிச்சம், உவ்வளவு வெளிச்சத்த ஒருநாளும் கண்டதில்ல உந்த கருப்பு வீதி,

வெளிச்சம் கட்டின சைக்கிள், கூடவே சேர்ந்த உந்துருளியோட உருளிற டாக்டருக்கு நடுவில இடங்தேடுது இழுத்து வார லாண்ட்மஸ்டர், வண்டிகட்டின மாடுக வழி தெரியாம போகயில நாதிகெட்ட சனமெல்லாம் நடக்குது உருவத்தம்மன் கோயிலப்பாத்து.

அரிசி கொஞ்சம் பருப்பு கொஞ்சம்
சேர்த்து வெச்ச துணி கொஞ்சம்
காணிப்பத்திரம் அடையாள அட்டை
பாயொண்டு படுக்கையொண்டு
சொட்டுமருந்து புட்டிப்பால்

கிடந்த கிடப்பெல்லாம் கையில கிடச்சதில சுருட்டீட்டு உடம்பு போயி உறவு செத்துப் போயி எழவூர்வலம் வருகிது காரக்குடி ஊர்ப்பக்கமா

ஒட்டுமொத்தமா எண்ணியும் எண்ணாமலும் பாத்தா முப்பது குடும்பம் இருக்கும், போனதுகள் போக மின்சினதுகள் இருந்த நிலம் கிடந்த இடம் படுத்த தேசம் பிரிஞ்சு தேடிப்போகயில கண்ணுக்கு தெரிஞ்ச ஊரு காரக்குடிக்கு வந்த சனம் இத்தன.

"வாழிற இடத்தில எங்க சனத்த வாழ விடாமப்பன்னுறதில உந்த அரசுக்கு என்னதான் சந்தோசமோ, பூனைய மடீல கட்டீட்டு சகுனம் பாக்கிற கதையா முடிவ தன்னட்ட வெச்சிட்டு எங்கட இடத்த எடுக்கிறதில என்ன லாபம் வரப்போகுது உவங்களுக்கு, எங்கட சனம் இருக்கிற இடத்தில உந்த கறுப்புத் தொப்பிக்கு என்ன வேல இப்ப, உப்பிடி ஒன்னுமில்லததுக்கு ஊரயே துரத்தி விடுதே இந்த அரசாங்கம், உத எதிர்த்து என்னதான் பன்னுறதோ"
போற வழியில சும்மா கிடந்த செல்லயரோட வாய் சொன்னதெல்லாம் உண்ம சத்தியம்

கிடக்கிற சாதி சனத்தோட நிலயப்பாத்திட்டு, சேர்த்து வெச்ச சோகத்தோட கண் கலங்கிப்போச்சு சிவப்பிக்கு, கத்திற சனத்தோட சேர்ந்து நெலவுக்கு கேக்குமட்டும் ஓ ன்னு ஒப்பாரி வெச்சிட்டு ஒண்ணுமில்லாமப் போயிடோணும் னு கிடந்திச்சு.

ஊரப்பாத்து வந்த சனத்தயெல்லாம் திருவிழாக்குப்போட்ட மோர்ப்பந்தல் தண்ணீர்ப்பந்தல் சக்கரைப்பந்தளோட வலயக்கட பொம்மக்கட இனிப்புக்கட பூக்கட புடவக்கட தட்டுக்கட என்டு போட்டுவச்ச பந்தளில இருத்திவச்சு வேண்டின உதவிகள செய்யுதுகள் காரக்குடி பேரூர் அமைப்பு பிள்ளைங்க.

கூட நின்ன மாரியப்பர் எட்டி நின்ன சிவப்பிகிட்டவந்து நடந்ததெல்லாம் சொல்லயில சிலையாக் கிடக்கிடக்கிற உருவத்தம்மன்னுக்கு உசிரு இப்பவோ அப்பவோ

"ஆறு மாசத்துக்கு முன்னால மட்டுமுனப்பக்கமா ஓர்ப்பாதுகாப்புக்கெனு கருப்புத்தொப்பிக்கும்பல இறக்கிச்சு உந்த அரசாங்கம், வாழிற இடத்தில பாதுகப்பென்னு உந்த சனத்தத்யெல்லாம் அடிமப்படுதினானுகள் அவனுகள், ஜனநாயகமாம் ஜனநாயகம், உப்ப இருக்கிற உலகத்துக்கு ஜனநாயகம் எப்பிடி சரிப்படும், இந்த நாட்டில நாங்க சிருபன்மாதன், ஓட்டுப்போட்டு ஆளுறதெல்லாம் அவனுகதனே, உந்த அரசாங்கத்துக்கு எதிர நாங்க போடுற ஓட்டெல்லாம் காணாமல் போகுது, அப்டி இப்பிடின்னு எப்பிடியாச்சும் ஒருத்தன் ரெண்டுபேர அனுப்பினாலும் அவனுகள் அங்க போய் கேக்கிரதுக்கெல்லாம் கோயில் மாடு மாதிரி தலையாட்டுரங்கள் இல்ல உடனே எழும்பிவரானுகள், என்னதான் செய்யிரதோ"
மாரியப்பர் படிச்சிட்டு சொல்லுறதிலயும் உண்மை யிருக்கு,

செல்லத்தாயி சொல்லிறமாதிரி ஜனநாயக நாட்டில சிறுபான்ம ஓட்டெல்லாம் செல்லா ஓட்டுக தான், நாங்கள் அனுப்பிரவங்களும் ஆளுங்க்கட்ச்சிதான், எங்கட சனத்துக்கு என்னதான் விடிவோ

"உவனுகள் பண்ணுற அநியாயத்தப் பத்திட்டு எங்கட பிள்ளங்க ஒன்னுசேர்ந்து எதிர்த்துதுகள், உதனலையே கருப்புத்தொப்பிகும் எங்கட சனத்துக்கும் அடிக்கடி பிரச்சின, எங்கட நிலமயப்பாத்திட்டு ஏதோ ஒரு புண்ணியவான் எங்கட பிள்ளயலிட கையில ஆயுதத்த தூக்கி குடுக்கயில பிரச்சன முத்திப்போச்சு"
மட்டுமுனயில யிருந்து வந்த பொன்னையர் நடந்ததெல்லாம் சொல்லயில, இனி வரப்போற பிரச்சனைய யோசிச்சு ஊரே நடுங்கிப்போச்சு

"உவனுகள் செஞ்சதும் கொஞ்ச நஞ்ச அநியாயமே, எங்கட பொம்பிலப்பிள்ளயல் வீதில போகேலாது, எதிர்துக்கேகிரவன நடுரோட்டில டயர் போட்டு எரிச்சானுகள், காவல்துறைக்கு சொல்லப்போன, சொல்லுறவன் அடுத்தநாள் பிணம், எத்தின நாளைக்குத்தான் எங்கட பிள்ளையால் இத பாத்திட்டு இருக்கும் அதன் அதுகளும் கிடைக்கிற ஆயுதத்தாள தட்டிக்கேட்டுதுகள், அதனாலையே எங்கட ஊர அடிச்சு துரத்திச்சு உந்த வீணாப்போன அரசாங்கம்"

பந்தளுக்க கிடந்த மட்டுமுனப் பெரிசில ஒன்னு பேத்தி போன சோகத்திலேயே இதையெல்லாம் சொல்லிடு கில கிடந்த மண்ண ஏறிஞ்சு சாபம் போட்டிச்சு

கிழவி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம், ஏதோ வீண் வம்புக்கு எங்கட பிள்ளகள் ஆயுதம் வேண்டி அரச எதிர்க்குதென்டுறதும் உந்த பத்திரிக்கயல் சொல்லுறதும் அண்டப்புளுகு கூட நின்ன காரக்குடி பெரிசுகள் வந்த சனத்தத்த்பபாத்து கண் கலங்கி சொன்னது இதத் தான்.

வந்த சனத்தயெல்லாம் இறக்கி ஆறுதல் சொல்லீட்டு உருவத்தம்மன் கோயில் வாசலில கூடுது கூட்டம், காரக்குடி பெரிசுகளோட சேர்ந்த காரக்குடி பேரூர் அமைப்பு பிள்ளங்க, கூட்டத்துக்கு தலமா தாங்கிராறு ஊரு விதனயர் என்டு சிவப்பியர், கிட்டத்தட்ட பஞ்சாயத்து மாதிரி.

என்னதான் சட்டம் வந்தாலும் கண்ணக்கட்டி நீதி சொல்லுறத பாக்கிரதிலயும் மனசப் பாத்து மனசோட நேசத்தைப் பாத்து நீதி சொல்லுற பஞ்சாயத்தே மேல் செல்லத்தாயி அறிவச்சொல்லுறதும் உதத்தான்

கூடின பெரிசுகளெல்லாம் இரக்கமா கதைக்கயில, கூட நின்ன விடலைகள் கைகட்டி பாக்குதுகள்

“என்னயிருந்தாலும் எங்க சாதி சனமப்பா அதுகளும் வீடு வாசல இழந்திட்டு எங்கள நம்பி வந்திருக்குதுகள், உதுகளுக்கு வேண்டின உதவியால நாங்கதான் செய்ஞ்சு குடுக்கோணும், குலம் கோத்திரம் பாக்காம இந்த சனத்துக்கு எல்லாரும் உதவோனும்”

இரவிட நெரிசளோட சனத்திட சத்தத்தோட சிவப்பியர் சொன்ன வர்த்த கேட்டு நெலவோட சேர்ந்த காத்தும் கொஞ்சம் நின்னு பாக்குது

"நீ சொல்லுறதும் சரிதான் சிவப்பி என்னதான் மட்டுமுன சனத்தோட ஒட்டில்ல ஓரவில்ல எண்டாலும் அதுகல காட்ட இது நேரமில்ல"

இரக்கமா சொல்லுற பெரிய கருப்புக்கு காரக்குடி பெரிசுகலெல்லாம் தலயாட்ட கூடவே சுத்தி நின்ன மரங்களும் ஆட்டி சொல்லுது சம்மதம்

"நாளைக்கு நடக்கப்போற உருவத்தம்மன் விழாவ இந்த வருஷம் தள்ளிவெச்சிடுவம், திருவிழாக்கு வந்த கோஸ்டிகலயெல்லாம் முட்பணத்தோட திருப்பி அனுப்பீடுங்க, மிச்சமிருக்கிற கோயில் பணத்த வெச்சு நாதி யில்லாம கிடக்கிற இந்த சனத்துக்கு எதாவது வழி செய்வம்"

"நீ சொல்லுரது சரி சிவப்பி உதுகள் தங்கட மக்கள இழந்து இங்கவந்து கிடக்கயில திருவிழா அது இதென்ன அதுகளோட மனசும் நொந்து போகும், அதோட ஊரே இப்படிக்கிடக்கயில ஊருக்கே எழவு மாதிரித் தானே, ஏலவூரில திருவிழா செஞ்சா சாமியே எத்துக்காது, அதனால திருவிழாவ தள்ளிப்போட்டு பதினஞ்சு நாள் கழிச்சு பெரியபூசைக்கு ஏட்பபாடு பண்ணுவம், எதுக்கும் பூசாரிய ஒரு வார்த்த கேப்பம்"
ன்னு தலயக்கொஞ்சம் பூசாரி பக்கம் திருப்பயில ஊரே எடுத்த முடிவில இனி என்ன சொல்ல இருக்கு அதான் சாமிகுத்தத்துக்கும் மாரியப்பர் வழி சொல்லிட்டாரே, ஊரோட சேர்ந்து தீட்டில்லமா பெரியபூச பண்ணிட்டா ஊருக்கும் கெடுதல் வராது

ஆந்தயிட சத்தமும் நிலவிட பேச்சும் முடிய முதல் கூட்டம் கலயோனும், அவசரமா தீர்க்கொனும் இந்தப்பிரச்சனயல, கொஞ்சமா மூடிக்கிடந்த ஊர் வாய் மறுபடி திறக்குது.

"ஆறுமுகத்திட காணிக்கு அங்கால சுடலைக்கு எதிர்ப்பக்கம் கிடக்கிற பொறம்போக்கு நிலம் பிலாவடிப்பிள்ளயார் கோயிலுக்கு சொந்தம் அந்தக்காலத்துல ராசயர் எழுதி வெச்சது, இப்ப அது பரிபாலக சபேட்ட கோயில் சொத்தா கிடக்கு, சுடலைக்கு பக்கமெண்ட படியா கோயில் வேலைக்கு பயநில்லயெண்டு சும்மாதான் கிடக்குது இருபது வருசமா அதில இதுகளுக்கு குடிச செய்து குடுப்பம், எத்தின நாளைக்கு தான் கோயில்லையும், குளத்திலயும் இதுகல்ட சீவியம் போகும்"

சொல்லி முடிக்கயில, பிள்ளையார் கோயில் பரிபாலகர் செல்வமய்யர் இந்த புண்ணியத்தில தனக்குமொரு பங்கிருக்குமெண்டு உருவத்தம்மனப்பாத்து ஒரு கும்பிடு போட்டு உடனே சம்மதம் சொல்லீட்டு
“வேண்டின உதவிய நான் செய்ரன் சட்டப்படி எல்லாம் சிவ்வப்பியன்னே செய்து குடுத்தா சரி”
ன்னு சொல்ல, ஊரிட மனசப்பாத்த கோயில் மணி தான அடிக்குது அதிகாலக்காத்தில,
கிட்டத்து உறவு துரத்து உறவின்னு வந்த சனத்தில ஓரவுக்கரங்க அஞ்சு போக மிதமாயிருக்கிற இருபத்தஞ்சயும் காரக்குடிக்கு சொந்தமாக்கிரங்க ஒறவு பாக்காம

"சரியப்பா நாலயிலயிருந்து வேல நடக்கட்டும், வந்தசனத்துக்கு சாப்பாட்டுக்கு ஒரு வழியப்பாத்திட்டு வெய்யில் வர முதல் வீட்டப்பாத்துப்போவமப்பா நேத்தில யறிந்து தூன்காமக்கிடக்கு சனம்" அரத்தூக்கத்தில நிண்ட பெரியகருப்பு கட்டலயாக் கேக்க,

குடிச போடும் மட்டும் சாப்பாட்டு செலவும், பொரம்போக்கு நிலத்தில குடிச போடுரத்துக்கும் கோயில் காசோட எங்க உழப்பும் இருக்குமென்னு காரக்குடி பேரூர் அமைப்பு சொல்லயில எட்டிப்பாத்த சூரியனுக்கு தெரியுது களைப்பு

ஒத்த நாளில ஒரு கூட்டத்தில இத்தன முடிவ எந்த சனம் ஒத்துப்பாக, அதுதான் காரக்குடி மண்ணோடயும் எங்க சனத்தோடயும் பெரும, சாதீன்னு சொல்லி வெட்டிக்கிருவாக ஒட்டிக்கிருவாக, ஆனா பிரச்சனென்னு வந்தா ஊரே சேந்திருவாக அதுக்காக சாதிய விட்டுக்கிற சனமில்ல இந்தசனம், எல்லாம் உதவின்னு செய்வாக ஒட்டுறவு வெச்சுக்க மாட்டாக
இருந்தாலும் வழா வந்த சனத்த ஊரோட சேத்துக்கிற மனசு எத்தின சனத்துக்கு வரும், உருவத்தம்மன் கிடக்கிற ஊருக்கு அப்பிடியொரு நல்ல மனசு

அரத்தூக்க பெரிசெல்லாம் வீட்டப்பாத்துப்போகயில, விசயம் தெரிஞ்ச சுகுமாரன் கோஷ்டி கோயிலப்பாத்து வருது,

வந்தசனத்துக்கு வேண்டின சாப்பாட்டுக்கு வழிய உதுகள் பாக்கட்டுமெண்டு பெரிசுகளெல்லாம் சொல்லயில மச்சான் கூட்டத்துக்கு வருது வேல, பேரூர் அமப்போட சேருது மச்சான் கூட்டம். விடலப்பசங்க பஞ்சாயத்து தொடருது.
இந்த சனத்துக்கு வந்த நிலமா தான் நாளைக்கு எங்களுக்கும் அதுக்கு முதல் ஏதாச்சும் பண்ணனும், உதயெல்லம் உடனே நிப்பட்டோனும், நாளைக்கு நாங்களும் ஊரவிட்டு போற நெலம வந்திரிச்சென்ன

மச்சான் கூட்டமும் பேரூர் அமைப்பும் சேர்ந்து கேக்குது கேள்வி தங்களுக்குள்ள,

ஊரக்காக்காத்தன் எங்க அமப்பையே ஆரம்பிச்சம், இப்ப உந்த அரசாங்கம் பண்ணுற அநியாயங்கலப்பாத்த எங்களால என்ன தான் செய்ய முடியும்
உதவிக்கு வந்த விடலக்கூட்டம் ஊரக்கப்பத்தப்பாக்கயில கூடகேட்டு நின்ன பொன்னையர் சொல்லுறாரு அதுக்கு வழி
மட்டுமுனையில நட்ன்ததுகலயெல்லம் அறிஞ்ச மனுசரிவர், அதனால மனுஷன் வழி சொன்ன சரியாத்தானிருக்கும்
சுகுமாரன் சொல்லயில வேகமா வந்த வண்டியொன்னு அடிக்குது பிரேக் கோயில் வீதீக்க.

பனை வளரும்....

Saturday, 30 May 2009

வரம் தருவாய் பராசக்தி

பாமரன் கைப்பொருள் பார் தேவி பராசக்தி
வரம் தருவாய் எங்கள் ஈழம் வாழா

வாழ்க தலைவன் வாழ்க தேசம் என
சொல்லிடு நாவினில் வலிமை தாராய்

ஜகம் காப்பாய் நீ ஜனனி
பாரினில் போற்றுவார் நீ சக்தி
கானமதில் காமாட்ச்சி என்பர் ஒரு
கமலமதில் வரமொடு சொல் லெடு

தருவாய் இல்லம்! தாராய் என இன விடுதலை!

காண்பார் கேட்பார் சொல்வார்
என் தேசம் - கடையில் பொய்
என உரைத்திடுமோ நின் சக்தி

காப்பாய் அருள்வாய் கருணையோடு
கண்திறவாய் அகம் எழு பரிபூரணி

நெல்லில் ஏட்டெழுதி கலைவாணி நினைதொழுதே
சரீரமோடு வேப்பிலை தனயுடுத்தி அகமகள்
உயிர் காப்பாய் யென் றினைந்தோம்

தலையோடு குடமெடுத்து பலதோத்திரம் தனயுரைத்து
கண்ணீர் கசிந்து பல் கோயில் கட்டி உனை தரித்தோம்

வழி கொடு உன் பிள் வாழ்விற்க்கு

அகம் துணை நில்
வல்லமை கொடு
பொருளோடு சொல் தா
பொறுப்பில்ல மானிடம் மாற்று

பரிபூரண சக்தி கொடு பாரினில் எம்
பச்சயினம் வாழ வழி செய்வாய்

தோற்றுவாய் வருவாய் அகிலம் காப்பாய்
பாடி நின் பாதம் தொழுது
நின்னொடு கலை பயின்று
செவி நா பசி தொடுத்து விரதம் தனை காத்து
நின் திருவடி கேட்டு நின்றோம்

இல் அகற்றி உறவ கற்றி பசி தனை கொடுமை செய்
எம் பாவம் தீர் அம்மா எம் விடுதளை கொடு

கொள் உயிர் உனக்கென பிறப்பொடு வாழ்
நீ தருவாயென நம்பிடு இனம் தனை
பரம்பொருள் பிழை அகற்றி யென விதி செய்

கவியோடு கலையெடுத்து நின்
திருவடி சேர்ப்பின் களிப்பொடு விடை கொடு தாயே



வேண்டும் வேண்டும் துணை நீ வேண்டும் அம்மா
பிரிவில்லா என் இனம் பிரிவொடு ஈழம் பெற

மனத்தோடு உறுதி வேண்டும்
நெஞ்சொடு நேசம் வேண்டும்
அவசரமில் சிந்தனை வேண்டும்
அவசியம கனவு வேண்டும்
எடுகோள் பயன் பெற வேண்டும்
அகிலமொடு எம் ஒலி சேர வேண்டும்
சொல்லொடு நீதி வேண்டும்
செப்பு நாவில் உண்மை வேண்டும்
வன்பில்லா சேர்மானம் வேண்டும்
கட்டொடு உணர்வு வேண்டும்
கட்டிலா வீரம் வேண்டும்
தரணி எதிர் புத்தி வேண்டும்
பெண்ணொடு நிகர் வேண்டும்
அறிவோடு அரசியல் வேண்டும்
கள்ளமில்லா அன்பு வேண்டும்
கருணையோடு ஞானம் வேண்டும்
கொடு என செல்வம் வேண்டும்
நல் வழி நீ காட்டிட வேண்டும்

தருவாய் பராசக்தி! அருள்வாய் ஓம் சக்தி!

வெள்ளைப் பூவில் செங் கமலத்தில்
சிம்ம வாகினியாய் அழகொடு வடிவெடுத்து
அமைதி காண ஆசி கொடு

தரணி தடுக்கும் அகிலம் கெடுக்கும்
பார் பறிக்கும் என் தேசக் கண்ணீரை
பரி வோடு துடைத்தெடு

எழுவாய் தேவி வருவாய் தேவி
காப்பாய் தேவி அருள்வாய் தேவி
கல் அகற்றி உன் சக்தி காட்டி

அவதியொடு அல்லல் தொடும் என் இனம் காக்க

Friday, 29 May 2009

பனையோடு விளையாடி - அத்தியாயம்-03

[ நாட்டில நாளுக்கு நாலிடத்தில சண்ட தொடங்கினாலும் காரக்குடிமண்ணும் சுத்தியிருக்கிற சாதிசனமெல்லாம் நின்மதியாத்தன் கிடக்குது, இரும்புத்தொப்பிக்காரங்கள் ஊரக்காணும் வர உரிமை கேக்கிர சனமெல்லாம் உவத்திரவமில்லமா வாழுது இருபது வருசத்துக்கு முன்னால ]


"இதனால காரக்குடி மேட்டுக்குடி மாசியப்பிட்டி மண்மேடு மக்களுக்கு, பெரிய விதானையார் சிவப்பியர் சார்பாவும் கோயில் பரிபாலகசப சார்பாவும் தெரிவிச்சுக்கிறது என்னெண்ட நாள மறுநாள் உருவத்தம்மன் கோயில்ல கொடிய்ரப்போகுது ஊரு சனத்தயெல்லாம் சுத்தபத்தமா நடமடோன்னுமென்னும் சாதி சனம் பாக்காம ஒத்துமையா நிண்டு ஊருக்காகவும் உங்களுக்காகவும் கலந்துக்கொனுமேன்னும் கேட்டுக்கிரங்கோ...."


குழாய் கட்டின வண்டிக்குப்பின்னால ஒடுதுக அரக்கச்சட்டக, சிந்தின மூக்க பாவாடேல தேயக்கிது சிலது.

பத்துநாள் திருவிழாவையும் உபயகாரர்களையும் ஏத்தி நின்ன துண்டுப்பிரசுரத்தில ஊரையே பேசவச்சது
- "உருவத்தம்மன் கோயில் உர்ச்சவத்தற்கு முழுப்பாதுகாப்பு காரக்குடி பேரூர் அமைப்பு"


“நாலிடத்தில நடக்கிறதா பாத்திட்டு எங்கட பிள்ளைங்க ஆரம்பிச்சதுதான் இந்த அமைப்பு... இப்ப எல்லா ஊர்ப்பிள்ளங்க்களும் சேர்ந்து செய்யுதுகள் ஏதோ இதுகலாலவாவது விடிவுகாலம் பிறக்கட்டும்”
வெத்தில போட்ட மணியத்தார் கூடி நிண்ட கூட்டத்திட்ட சொல்ல, ஊருக்கு ஊர் நடக்கிற பிரச்சனயல நிப்பாட்ட நாங்களெல்லாம் ஒத்துமையா நிக்கொனுமேண்டு சந்தில சுருண்டு கிடந்த சனமெல்லாம் வெளியில வந்தது கூடுதுகள் ஊர்க்கதயோட


ஊரே கூடிக்கிடக்கயில கொட்டில்ல கிடக்கிற கன்னுக்குட்டி மட்டும் ஊரப்பாக்காம துள்ளிற மாதிரி நேத்துப் பெஞ்ச மழயில கையில கிடந்த பிரசுரமெல்லாம் நாலா மடிச்ச கப்பலாகிது. தண்ணிலபோர போற கப்பலோட கலையிட மனசும் சேர்ந்து போகயில தன்னில மறக்குது கலைக்கு.

“டேய் கல உதயிங்க கொண்டுவாடா, ஊரே செலவலிச்சு செய்யிரது உனக்கென்ன கப்பல் விடவே ...”

திண்ணயிலயிருந்த முருக்குமீச வெத்தில பெட்டீக்க கையவிட, வெட்ட கப்பலெலாம் தண்ணீல மூழ்கிப்போக, தன்னில திரும்ப கப்பல் செய்யாமலே தண்ணீல போகுது பிரசுரம்.

முறுக்கு மீசேல கோவம் சிவப்பியருக்கு சின்னக்காலில ஓட்டம் கலைக்கு.

ஓட்டம் பிடிச்ச காலுகலெல்லாம் ஒன்னச்சேருது தொடரிது ஆட்டம் கொலகொலய முந்திரிக்கா நரிய நரிய சுத்திவா.

-----------------------------------------------------------


கரச்சுவெச்ச சானியெல்லாம் அரிச்சுப்போன அடுப்பங்கரையில மெழுகாக்கீட்டு மங்கம்மா கைய்யக்களுவயில கூட்டம் சேருது வீட்டுத் திண்ணயில

“அடியே மங்கம்மா எழுதிவெச்ச கோயில் கணக்கையெல்லாம் உந்த சாமி படத்துக்குப்பின்னாடி வெச்சிருக்கன் அதக்கொஞ்சம் எடுத்திட்டு வா, அப்பிடியே இவங்களுக்கெல்லாம் தேத்தண்ணியப்போடு கோயில் வேலயில கலச்சுப்போய்ட்டுதுகல் மனுசங்க”

வாழவைக்கும் மண்ணும் தாகம் தீக்கும் தண்ணியும் இன்னும் ருசி மாறாமயிருக்கிறது எங்க மண்ணில்தான் சொல்லிற செல்லத்தாய்க்கு வாயில சக்கர

கணக்கு வழக்கெல்லாம் தேத்தண்ணிக்கோப்பயோட திண்னேலையே போக குசுனீக்கயிருந்த மங்கம்மா களைப்போட கத்தினா

“டேய் மாறன் கலயக்கூப்பிடுடா இருட்டிப்போச்சு “

கதையோட போராடின சுகுமாரனோட கனவக்கலச்சிட்டு வேகவெச்ச சுடுதண்ணிய ஊத்திறா மாவில இரவைக்கு சைய்யப்போற புட்டுக்கு, முந்திரிக்கா கூட்டத்த தேடிப்பொரன் மாறன்

“டேய் அண்ணா திருவிழான்னா இருட்டாதாட, ஒரே வெளிச்சமாயிருக்கிடா “
வெளிச்சத்தில கழண்ட காற்சட்டைய தூக்கிப்போட்ட கலைக்கும் அண்ணனுக்கும் வயசு வித்தியாசம் பத்து.

தலயில ரெண்டு போடு போட்டு வீட்டப்பாத்து கூட்டிவந்து பிடிக்கிற சண்டயில வீட்டில கிடந்த தலையணைக்கு வாயிருந்த ஊருக்கே சங்கு,

“அம்மா உவன அந்த சின்ராசு கூட்டத்தோட சேரவிடாதம்மா, அவனுங்க புத்திதான் உவனுக்கும் வருது, ஆக்களுக்கு முன்னால மட்டுமரியாதஇல்லாம டேய் என்றானம்மா “

கையில கிடந்த தலயான தூக்கி வீசல ,

“டேய் சுகுமாறன் வாட கோயிலுக்கு பந்தல் போடணுமாம், அப்பா ஊர் பெடியன்களையெல்லாம் கூட்டிப்போகச் சொன்னார்”
சின்ராசண்ண மொக்கராசு வீட்டுக்கு முன்னால,

“சரிடா மச்சான் அப்பிடியே உவனுங்க கண்ணனாக்களையும் கூப்பிடு நான் நேரா சந்திக்கு வாரன்”

சைக்கிள்ட சாவி கையில எடுக்கேக்க ஊருக்கு உபதேசம் உனக்கென்ன.


கோஸ்டி சேருது சந்தீல சைக்கிள் சத்தத்தோட மச்சான் சத்தம் கேக்கிது ராத்திர மரத்துக்கு


நேத்துப் பெஞ்ச மழையிட ஈரத்தோட உருவத்தம்மன் கோயில் வீதி நிறையுது இருட்டில குலைக்கிற நாயோட சேர்ந்த நரியோட சத்தத்தோட

மோர்ப்பந்தல் தண்ணீர்ப்பந்தல் சக்கரைப்பந்தளோட வலயக்கட பொம்மக்கட இனிப்புக்கட பூக்கட புடவக்கட தட்டுக்கட சேர சட்டிமுட்டி பூச்சாடி மஞ்ச்சாடி காத்தாடி கைப்பிள்ளன்னு வேண்டினதெல்லாம் வந்திறங்கி மைக்குப் போட்ட பந்த்தள்ளிளையிருந்து ஊருக்குள்ள போட்ட குழாய்க்கெல்லாம் இணப்பக்குடுத்து சுப்ரபாதம் போடயில கொட்டிள்ளயிருந்த மாடுக கண்ணா விழிக்குது, சைக்கிள்ள ஏறின மச்சான் கூட்டம் வீட்டப்பாத்துப்போகிது


ராத்திரீட பந்தல் களைப்பெல்லாம் பாயோட போக படுக்கதொடரிது கால பத்து மணிக்கும்


வரப்பு முடிஞ்சு வீடு வந்த சிவப்பியருக்கு வருது வேல

“ பத்து நாள் திருவிழாவுக்கு வேண்டிய நாடக நாட்டிய கூத்தாடிக் கோஸ்ட்டிக்கு நேரம் குறிக்கோனுமாம்னு பரிபாலக சப கேட்டிச்சு உங்க முடிவுக்கு தான் காத்திருக்காங்க கோயில் சபயில”
ஓட்டி வந்த சைக்கிள்ள நிண்டு கொண்டே சொன்னாரு செல்லயர்

“கோயில் பக்கமா போயி சபயிட்ட சொல்லு இன்னும் பத்தே நிமிசத்தில நிகழ்ச்சி பட்டியலோட வந்திடிறன் எண்டு”
ஊத்தி வெச்ச பழன்சோத்து தண்ணியில வரப்பு களைப்பா போக்கீட்டு உள்ளேயிருந்த நிகழ்ச்சி பட்டியலோட கிளம்பிறார் கோயிலப்பாத்து.

-----------------------------------------------------

கடசிய மிஞ்சிக் கிடந்த மீன் குழம்ப ஒண்ணுமில்லாம ஊத்திக் கழுவீட்டு மச்சச் சட்டியெல்லாம் மூலயில போக பூட்டி வெச்ச சைவச்சட்டியலுக்கு பத்து நாள் உழைப்பு ஒப்பந்த அடிப்படேல

“நாட்டு நிலமா நல்லாயிருந்த எங்கட சாதி சனத்தயெல்லாம் இந்த திருவிழா சாட்டோட கண்டிருக்கலாம், இந்த வருஷம் பிரச்சன பிரச்சன எண்டு சனமெல்லாம் ஊருக்கையே கிடக்குது, எப்ப தான் இதெல்லாம் மாறப்போகுதோ”

சட்டி முட்டியோட பேசின நிலம போய் சும்மா கிடந்த திண்ணயில ஒன்னா சேர்ந்திருக்காக ஊரு போம்பிளக

கதை புரளுது காதுக கேட்கிது தூரத்திலயிருந்த பசுமாடு கூட எழுந்து நின்று தலையாட்டுது

“அம்மா தேத்தண்ணி”

பாயில கிடந்த சுகுமாரன் சுகமாக் கேட்க

“பொருடா வாரன்”

ஊர்க்கதயில கிடந்த மங்கம்மாக்கு வீட்டுநினைப்பு கொஞ்சமாத்திரும்பிது.

--------------------------------------------------------------------

முதல்நாள் கொடியேத்தம் பின்நேரத்திலயிருந்து கச்சேரி ஆரம்பிக்குது.
மயிலாட்டம் ஓயிலாட்டம் பொம்மலாட்டமெல்லாம் முன்னாம் நாள் திருவிழாக்குப் பிறகுதான் கட்டளையா சிவப்பியார் சொல்ல

“அப்போ மூனுநாளைக்கும் நாதஸ்வரம் மேளம் மிருதங்கம் சங்கீதம் பரதம் என்னு கச்சேரியாவது போடுங்கப்பா கல கட்டட்டும்”.

பக்கத்திலயிருந்த பெரிய கருப்பு சிபாரிசு செய்ய பொங்கின சோறு பட்டினிப்பண்டத்துக்கு போனாலும் வடிச்சு கஞ்சியாச்சும் மிச்சமிருக்கு.
ஆக மொத்தத்தில ஊரே தூங்கப்போரதில்ல பத்து நாளைக்கும் நிகழ்ச்சிய நிரப்படுத்தி நேரமெல்லாம் போட்டுமுடிஞ்சும் நேரமாகல்ல இன்னும் மத்தியானச் சோத்துக்கு.

வந்த காரியம் முடிஞ்சு போக போட்டு வெச்ச பந்தலுக்குள்ள தொடருது உள்நாட்டு அரசியல்.

“மட்டுமுனயில தொடர்ந்தும் செல்லடியாக் கிடக்கிதாமப்பா சனங்கலெல்லாம் திக்குத்தெரியாம ஒடுதுகளாம். செத்துப்போன சனத்தமட்டும் உறவு பாக்காம விட்டிட்டு ஊரத்தேடிப் போகுது எங்க சாதிசனங்க காலையில பேப்பர் படிக்க ஈரக்கொலையே நடுங்குதப்பா”

சொன்ன குரலிலேயே தெரியுது நடுக்கம் செல்லையருக்கு,

எல்லாத்தையும் இந்த உருவத்தம்மன் தான் பாத்துக்கணும் உரிம தேடிற எங்கட சனத்துக்கு நாட்டப் பிரிச்சுக்குடுத்தா நின்மதியாப்போயிடும், இந்த சனியரசாங்கத்தால எப்பதான் விடிவு காலம் வரப்போகுதோ
( மனசுக்க தங்கச்சி ராசம்மாவ நினச்சு ஒரு சொட்டு கண்ணீர் கீழ வரயில கையொன்னு ஓடிப்போய் உண்மைய மறைக்குது ஊருக்கு )

உச்சி தொட்ட சூரியனோட எடுக்குது பசி கலயிது கூட்டம், குசினீக்க சமைச்சு வெச்ச கத்தரிக்கா குழம்பு பக்கத்து வீட்டு திண்ணைக்கு தொட்டுக்கொள்ள ஊறுகா

“குழம்ப கொஞ்சம் ஊத்து மங்கம்மா எத்தின நாளானாலும் இந்த கத்தரிக்க

குழம்பிட வாசம் மட்டும் உன்ட கைய பக்குவத்தில இருக்கிடி”
ஊத்தின குழம்பிட ருசி பாக்கயில, அடுப்பங்கரையில போட்ட பழைய துணி மாதிரி நாப்பது வயசிலயும் வந்த வெக்கம் வயசப்பாத்திட்டு மறஞ்சு போகுது

கருத்த மீசேல ஒட்டிக்கிடந்த ஒத்தசோத்த இழுத்து எடுக்கையில, கோவம் வந்த சூரியன் மறயபபாக்குது பூமீக்க

----------------------------------------------------------------------------------------------

குசுனிக்கு பின்பக்க வாசலோட இறக்கிக்கட்டி கூரவேஞ்சு சானி மொழுகி திண்ணகட்டி, வேள்ளான்மேல வெளயிரதோட வீட்டுக்கு வாங்கிரத்தையும் மூடிக்கட்டி மிச்சமிருக்கிற வெங்காயத்த கயித்தில தூக்கிக்கட்டி கொஞ்சமா கிடக்கிற இடத்துக்க கைவிட்டு வெச்ச உரலுக்கு வருது வேல

வறுத்து வெச்ச அரிசியும் வறுத்து வெச்ச பயறும் ஒருகைப்பிடி ஒருகைப்பிடின்னு அள்ளிப்போட்டு குத்தயில, திண்ணேலயிருந்த கல மாறிக்குதிக்கயில அரிசியும் பயறும் போடுது தாளம்

சூரியனோட கோவந்தனியமுதல் சுட்டு முடிக்கோனும் பூசைக்கு வேண்டின பலகாரம், சாயங்கால இருட்டோட போன சமஞ்சபொண்ண தேடிற மாதிரி முடிக்கிற வேலைக்கா முழுசா ஓடுது மங்கம்மா ஓட காலுக.

“அம்மா நான் ஒண்ட எடுக்கட்டே”

சுட்டு வெச்ச பலகாரத்த ருசி பாக்கப் போகயில சாமியோட சேர்ந்த சம்பிரதாயத்த உருவாக்கின மனுசங்களுக்கு குழந்தயோட மனசு புரியுமா என்ன

“அடேய் சாமிக்கு படைக்கிரதெட படைக்கமுதல் தொடக்கூடாது” ன்னு சுடுற பலகாரத்த அகப்பேல எடுக்கையில படல கொஞ்சம் போடுது சத்தம்

“அண்ணே சிவப்பி அண்ணே”
நடுங்கின குரலொண்டு கேக்குது படலேக்க

மத்தியானக் கதையில பேசினதெல்லாம் புத்தி சொல்லயில காலுக்கு போற ரத்தத்துக்கு போடுது அணை. திண்ணயில குத்தி வெச்ச கால நிலத்தத் தொடையில நிலங்க்கூட நடுங்குது,

கேக்கிர குரல் உது நெஞ்சோட ஊரிப்போனது பழகிப் பழகி கதுக கேட்ட குரல், படலயோட சத்தம் ராசம்மா குரலாச்சே


பனையோடு விழையாடுவோம்.......

பனையோடு விளையாடி... அத்தியாயம் 2


ஊரோரப் புளியமரம் பக்கத்தில தென்னந்தோப்பு பாகமாய் பாத்த வளராத ரெண்டு பூவரசன். ஒரு மாசமா தண்ணி விட்டும் ஆறு நாள மழபெஞ்சும் ஆறடி போகாத ஆறு பலாக்கண்டுக்கு ரெண்டு பலா மரம். சுத்தி முத்தி பாத்த நாற்பது மரவெள்ளியோட இருபது கத்தரிச்செடி.

பருவம் வந்த வாழப்பூவ பதம் பாத்த காக்காயா எச்சில் கையால துரத்தி அடிச்சார் சிவப்பியர்.

உள்ளேயிருந்த மங்கம்மா திண்ணைய நோக்கி சொல்லிச்சு
" இன்சாருங்க உந்த காக்காயா விட்டிட்டு கெதியா சாபிடுங்கோ" ன்னு

பதமா செஞ்ச சோத்தையும் பாவக்க குழம்பயும் முட்ட பொரியலோட மூக்க பிடிச்சிட்டு முந்தின கத பேச கிளம்பிராறு முலக்கடைக்கு.

“சொன்னது சொல்லிப்போக செஞ்சது செஞ்சுபோக கட்டினவ பேச்ச கரைபடமா முடிக்கிறனே”
தன்னையே கேட்டாரு ஒரு கேள்வி.


"ஏனப்பா வார சனிக்கிழமை மாறனோட திவசம் வருதே ஞாபகம் இருக்கோ" நாளயாண்டேக்குள்ள கடைக்கு போய் சாமான் வாங்கோணும்.

“இந்த மனிசனுக்கு வர வர வண்டீல மாட்டப் பூட்டவே ஞாபகம் வாரதில்ல" அவிச்சு வச்ச பனங்கிலங்க உரிச்சு கொண்டே கேக்கிறா மங்கம்மா.


மறந்து போன ஞாபகத்த மனசுக்குள்ள தேடீட்டு மரத்துப்போன நெஞ்சோடு கிளம்பிராறு முலக்கடைக்கு
( மத்தியான மசக்கயில செல்லையர் ஞாபகத்துக்கு வர பனங்கல்லு வாசனையும் வந்து போகுது)

------------------------------------------------------------------------------------------------------




கையில ஒரு கருத்தப்பை அறுந்து போன செருப்பு எங்கேயோ பார்த்த மாதிரி புதுசா பாத்தான் காரைக்குடிப் பெயர் பலகைக்கு பக்கத்தில நிண்ட சொந்த ஊர்க்காரன் கலைமாறன்

பட்டணத்து பஸ் வாரத்துக்கெண்டே அகலமாப் போட்ட வீதி ஏதோ மழபெஞ்ச சந்திரன ஞாபகப்படுத்தும். தூரப்பர்த்தா ஏதோ வெள்ளித்தட்டும் வெண்கலப்பதக்கமும் தான் கிட்டப்போயி மெல்லப்பார்த்த கிடக்கிற குண்டுகுழியெல்லம் முன்சீலதான்

செல்லத்தாயி சொல்லிறதிலயும் உண்மையிருக்கு எங்கேயோ கிடக்கிற நிலவுக்கு காதலிய ஒப்பிடிறியே இதுக்குத்தான என்டு.





வீதியோரம கிடக்கிற பஸ் நிலையம் ஊரு சனத்தையே பெருமப்படுத்திது. நாலுபக்க பெட்டீக்க மூண்டு பக்கம் மட்டும் முழுசா மூடி வெளிப்பக்கமா திறந்த வாசல் வெச்சு விலாசமா ஜன்னல் கட்டி வெள்ளயடிச்ச பூச்சுக்க கிழிஞ்சுபோன சுவரொட்டீக்க வெள்ளைய தேடினாலும் ஆறுமாசமா ஒட்டின கிழிஞ்சல்கள் பட சுவரொட்டி மட்டும் வெள்ளப்பூச முழுசா மறைக்குது. எங்க ஊருக்கு வார சனம் வெய்யில்ல வேகாக்கஊரு சனம் கூடிக்கட்டினது இந்த சின்ன மடம் பேரு மட்டும் காரைக்குடி பஸ் நிலைய மனை

முன்னால சுந்தரம் மாஸ்டர் வீடு பின்னால விழுது விட்ட ஆலமரம். தூரமா தெற்குப்பக்கம் காத்தடப்போன ஆலங்காடி கூடிர வேப்பமரத்தடிச்சந்த, ஊருக்கு ரெண்டு செட்டி கட, ஒருமாரி ஆட ஒருவத்தம்மன் கோயில் துணைக்கு ஒரு பிலாவடிப்பிள்ளயார், நாலா பக்கமும் டீடிப்பாத்தா நாலு முலக்கட மூணு வெதுப்பகம் டீக்கடையோட மூண்டில ரெண்டு மூக்கயனுக்கு சொந்தம்.

இது போக இருபது ஒத்தயடிப்பாத ஆறு மேட்டுப்பள்ளம் அறுபது வாய்க்கால் வயலுக்க பதினஞ்சு குறுக்குச்சந்து பதினாறு மூலச்சந்து. எழுபது வரப்பு தோட்டத்தோட கிடக்க.

மொத்த ஊருமே வந்து போகிது ஒரு நிமிசத்தில, வந்ததில ஒன்னயுமே காணோம். மிச்சமா கிடக்கிற பெயர்ப்பலகயோட ஏதோ பேச்சுவார்த்த செஞ்சிட்டு காணாத ஊற தேடிப்போறான் கால்நடையா.





போரவழியில காணாதது சனத்தையும் வேளிகளையும் தான் மனசுக்குள்ள மாமன் மச்சான் பேசிறதெல்லாம் மனப்பாடமா கேக்கிது, ஊரு சனத்திட உலருவாய் பேச்செல்லாம் காதுக்குள்ள கத்திற கவுளிச்சத்தம் மாதிரி.

சாதி பிரிச்சு சம்மந்தம் செஞ்சுக்காட்டியும் சாதி சனமெல்லாம் ஒத்துமயத்தான் வழ்ந்திச்சு.

காரைக்குடி ஊருக்கே இவங்கதான் நாட்டாமக்கார மாதிரி அப்பெல்லாம் விதானையார் குடும்பமெண்டு சொல்லுவினம்.

அந்தக்காலத்தில சிவப்பியர் விதானக்கிட்ட உதவின்னு கேட்டுநின்னா வித நெல்ல கூட விசுக்கென்னு குடுத்துடுவாங்க. இந்தக் குடும்பத்துக்கு ஊரே கட்டுப்படுது.
பெரியப்பன் சித்தப்பன் அத்தை மாமன் மச்சினன் சொந்தக்கரனா இவங்க குடும்பத்துக்கு மட்டும் உடையார் வீதின்னு வீதியே வெச்சிருக்காங்க, இருந்தும் ஊரு கட்டுப்படுதென்டா இவங்க மனசுக்குத்தான்.

சொத்தெல்லாம் மொத்தமா கிடந்தாலும் பூட்டி வெச்ச பட்டுத்துணி மாதிரி பத்திரமா பத்திரம்மா கிடக்கோனும் வீட்டு அலுமாரிக்க. நாலு காசு கிடந்ததாலும் கட்டிற சீல மாதிரி வெளியில தெரியோனுமென்டா நாலு பேருக்கு குடுக்கோனும் செல்லத்தாயி மனசு மறைக்காம சொல்லுறது இதத்தான்


சிவப்பியர் நாட்டமா பண்ண ஊருக்க ஊருக்கெண்டு ஒத்துப்போன குடும்பங்க ஐநூறு இருக்கும். சிவப்பியர் குடும்பம் பதினாலு போக குருக்கள் பூசாரி பரிபாலகரெண்டு உருவத்தம்மன் கோயிலுக்கும் பிள்ளையார் கோயிலுக்கும் செலவில்லாம பன்னிரெண்டு குடும்பம். ஊருக்க மூட நம்பிக்கைக்கும் இவங்கதான் காரணம் ஊரிட அறிவான பக்திக்கும் இவங்கதான்.

காரைக்குடி மட்டுமில்ல நாட்டுக்கே சோறுபோடா வித விதைச்சு அருவசெய்ய அறுபதா வெள்ளாளர் குடும்பம். போகம் முடிஞ்சு போகம் வர காத்திருக்கிரதால இந்தக் குடும்பங்களுக்கு தனிப்பெரும

சலவ செய்ய நாலு வண்ணன் குடும்பமா, ஊரு பெரும சொல்ல பனமரத்து பயன் தேடி இடுப்பில ஒரு பை கட்டி கள்ள இறக்க பதினஞ்சு பள்ளன் பன்ந்தோப்ப சொந்தமாக்கி.

ஊருக்காரங்கள அழகாக்க மூணு சவரக்கரர் ஊரில ஒன்னு போன ஒப்பிக்க ஆறு பரயன்கள் குடும்பம் குடும்பமா வாழ்ந்து போக. மிச்சமிருந்த சனமெல்லாம் தொழிலுக்கேத்த சாதி பிரிச்சாக, வாழ்க்க மட்டும் நடத்துறாங்க எதோ ஒரு வட்டத்துக்க

இவக சாமிவிட்டு சாமிகும்பிடுவாங்க, ஊரு விட்டு ஊரு பிழைப்பாங்க. முறுக்கு மீசேல கிடக்கிற நர முடிய மறைக்காமல் போனாலும் போவாக சாதி விட்டு சாதி மட்டும் மால மாத்திக்க மாட்டங்க அப்பிடியொரு பெருந்த்ன்ம இந்த ஊர்க்காரன்களுக்கு. காதலிச்ச மட்டும் சாதி போகும்னா ஊரே வேட்டிகிடுவாங்க இந்த சாதியில்லா காதலுக்கு, காதலுக்கே சாதி போட்டு வேலி போட்ட பெரும இவங்களுக்குத்தான்.



“நம்ம சனத்தில ஒருத்தன் கூடவா ஊருக்கயில்ல”
வேட்டிப்பனைக்கும் ஒட்டாத காத்துக்கும் ஒப்பன போட்டுக்கேட்டான் மாறன், எவ்வளவு கேட்டும் ஒரு பதில் இல்ல ஒரு பயனில்லா.

செல்லத்தாயி சொல்லிறமாதிரி “மரங்களெல்லாம் பேசத்தொடங்கினா நாட்டில மழைக்கே பஞ்சமிருக்காது”

காதுக்க சொல்லாம மனசுக்கையே சொல்லிட்டு வெட்ட வெளியில இவனுக்கே விரிச்ச செம்ப்பாட்டு கம்பளத்தில தனியா நடந்து போறான் கலை மாறன்.




கல்வீடு மணவீடு குடிசைவீடு கூரவீடு தகரவேலி கிடுகுவேலி ஒலவேலி கல்மதில் கட்டுமதில் இருந்த அடையாளத்தில சின்னம் கூட மிச்சமில்ல. ஊரையே வண்டி கட்டி நாடுகடத்தீட்டாங்களோன்னு தனக்குள்ளேயே தலப்பா கட்டி நடக்கிறான் நாலுகிலோமீட்ட்ர்.

கண்டதெல்லாம் காணாமல் போனாலும் இந்த வெய்யில் மட்டும் உசிர வாங்குது. உச்சந்தலயில ஒளியிட வீச்சுப்பட்ட உள்ளயிருக்கிற நரம்பெல்லாம் சூடாக்கி உசிரக்கேக்குது. கொஞ்சமா சூட்டத்தனிப்பமென்டா ஒரு பயலில்லா ஊருக்க ஏது தண்ணி, வீச்ச மறைக்க நிழல் கேட்டா பட்டமரமெல்லாம் மொத்தமா காயிது. உடம்பிட சூட்ட உச்சந்தலயில எட்டிப்பார்த்த வேர்வய ஒத்தக் கையால வீசிப்போட்டு கரையத்தேடிரான் கானல் நீருக்கனின்டு.

உச்சி வந்த வேர்வைத்துளியும் நிட்க்கமாட்டேங்க, வீசிப்போன ஒத்தக்கையும் விடமாட்டேங்க. வேர்வைக்கும் விரல்களுக்கும் மகாபாரதம். போருக்குப்போன அருச்சுனன் போல சுத்தி முத்திப்பாக்கிறான் உறவுக்காரன, பகைவனாக்கூட ஒருத்தனில்ல.

கண்ணக்கட்டி மூச்சுமுட்டி நடைபாதேல இடம் தேட முழிச்சுப் பார்த்த பாதியில கிடக்கிது உருவத்தம்மன்.

முட்டின மூச்சு முழுசா போயிருச்சோ கட்டின கண்ணும் காணாமல் போயிருச்சோ நிக்கிறது ஊரிலயா இல்ல வெட்டியான் கூட வேளுத்துப்போன சுடலேலையா?, மகாபாரத போரில வெற்றியாச்சு வேர்வைத்துளிக்கு, வேர்த்துப்போச்சு கலைக்கு
தடுமாறின காலோட தடம்மாறாம போயி இடிஞ்சு போன கோயில் படியில இருக்கிறான் நடந்தது அறிஞ்சும்.




கூரையில்லாத கோயில், துப்பாக்கி சூடுபட்டே ஓட்டயாப்போன பாவப்பட்ட சுவர், ஓட்டரயடிக்காத அறையில கிடக்கிற மணிகள் சொல்லுது கர்ப்பக்கிரகமெண்டு, களவாடப்பட்ட கோயில் சிலக்கிடயில கண்ணகிசில மட்டும் சிலம்போட.
தூரமா தெரியுது வத்திப்போன கேணி துவண்டுபோய் கிடக்கிது கருவேலங்காடு கோயில் வீதீக்க, மிச்சமா கிடக்கிறது கோயில் கல்லும் வளஞ்சுபோன சூலகமும்தான்.


சுருட்டமுடிக்குள்ள கையவிட்டு ஏதோ தேடீட்டு காத்தில சாயிர கத்தரிச்செடி மாதிரி ஓட்ட விழுந்த சிவரில சாய்து தல, காத்தில சிரிக்குது கோயில் மணி.
"தொலஞ்சதயெல்லாம் எப்ப தரப்போரா உறுவத்தாம்மா, இதுக்கா இத்தன கஷ்டமும் பட்டோம்”
ன்னு காத்திலையே கத்தீட்டு தொலஞ்சதயெல்லாம் தேடப்பொரான் மாறன், தேடிரதயெல்லாம் தொலைக்குது சூரியன்


கல் மனச போனாலும் கள்ளமில்லாமல் பேசுவாலே தமிழ், விரச்சவனயெல்லாம் விலாசீட்டு மச்சான் மச்சான்னு தோழாத்தட்டுவான்களே சின்ராசு மயில்சாமி கோயிலன். படிச்ச மாஸ்டர் பரதேசி சாமியார், அம்மா மகமாயி அப்பா சிவப்பியர் அண்ணன் சுகுமாரன் இன்னும் எத்தினையோ முகங்க சொச்சத்தில வந்தது போக.

உருப்படியா நின்ன காக்காயொன்னு கரயாம சொல்லிச்சு இவங்க பிழப்ப,

பச்சயிலயில காக்கயோட பாசத்த துடச்சிட்டு கட்டின கண்ணுக்கு சொல்லிக்குடுக்கிறான் கொஞ்சம் கலஞ்சுபோக.



இன்னும் விழையாடுவோம்......

பனையோடு விளையாடி... அத்தியாயம் 1


அத்தியாயம் 1

எங்கேயோ தொலஞ்சு போன எல்லைகோடு, வர்த்த கூட தைரியஞ் சொல்லா ஞாபகங்க, உணர்வால செத்துப்போன உறவுக, விளையாட்ட தொட்டில் கட்ட விபரீதமா போன இன விதக, மண்ணுக்கயின்னும் மிச்சமா போக, இதையெல்லாம் சுமந்து கொண்டு, பனங்காட்டுபக்கமா பத்தியமா கட்டின வண்டி பகத்து ஊரு திருவிழாக்கு போறதா போல செம்பாட்டுமண்ண வாரித்துளச்சு வருது பட்டணத்து வண்டி படு வேகமா.


“ இது என்னடா கூத்தாகிடக்கு! சனத்துக்கு குடிக்க கஞ்சிய காணோம் உவனுங்க பூங்கா கட்டபோறாங்களாம் அதுவும் தொழில்நுட்ப பூங்காவாம்.”
சந்த கடையில சனங்க சத்தத்தில கீரயம்மா வெள்ளையம்மா கூவிந சத்தம் மட்டும் பலமா கேட்ட மாதிரி ஊருக்கு வரப்போற உவதிரவத்த பத்தி உண்ணதமா ஒப்பிச்சார் ஊரு பெரிசு மாரியப்பர்.


முப்பது வருஷமா மூச்சபிடிச்சிட்டு முக்காளி அம்மனோட சேர்ந்து முழுசாப்போராடியும் நாலு வருஷமா சாந்தியும் சமாதானமும் மட்டும் சாதாரணமாய் கிடக்கிது. மனுஷனுக்கு வாழ வழியக்கானோம்.
ஆடிச் செவ்வாய்க்கு சோறு வெச்ச காக கூட்டம் மாதிரி வண்டியே கரையிது நாட்ட பத்தி.


இதையெல்லாம் கேட்டுக்கொண்டு வஞ்சத்தில போனதெல்லாம் வார்த்தையோட போகட்டும் வாழ மட்டும் வழி கிடைக்கும் இந்த வாழிற சனத்துக்கு தனக்குள்ளேயே தர்மம் பாடிட்டு தலைசாயிரான் கொஞ்சம் கலைமாறன்.





உடல உருக்கிற வெய்யில், நீண்ட இடைவெளியில கூட கானல் நீரா மாறிப்போக, ஓராயிரம் எல்ல பூமிக்கு ஒத்தபனை மட்டும் பதில் சொல்ல பக்கவாத்தியமா கள்ளிச் செடியும் கத்தாளகண்டும் செம்பாட்டு மண்ணுக்கு பெரும சேக்குது.


மத்தியான மசக்கயில ஒத்த மனுஷன் நடைகாணா கால்நடை மட்டும் கட்சிதமாய் போக அண்டவெளியில நிசப்த பூமியில கேட்கிது ஒருசத்தம் சாஞ்சு கிடந்த மாறனுக்கு விழுது இடி நெஞ்சில,


"உது காலம் காலமா இங்க கேட்ட சத்தம் தனப்பா இப்ப எல்லாம் மாறிபோச்சு, அது வேற ஒண்டும் இல்லையப்பன் உவன் டிரைவர் அடிச்சா பிரேக் தான்.."
நெஞ்சு பயத்த காலத்தில தூக்கி போட்டுட்டு சொன்னார் மாரியப்பர் நடுங்கின குரலில.


விழுந்த அடியும் கேட்ட சத்தமும் புத்திக்குள்ள கிடக்குது இன்னும், எல்லாத்தையும் கண்நீரில கரச்சிட்டு மசக்கயில மடிசாயுது ஊருக்கு போற வண்டி.


“ யாரது எங்க செம்பாட்டு மண்ணகருப்பு கோடு போட்டு ரெண்ட பிரிச்சது”
பஸ் நிலையமா நிண்ட ஒத்த பனைமரம் ஊருக்கு போட்ட கருப்பு வீதிய பாத்து கேக்க, செல்லதாயி சொன்னதிலையும் ஏதோ அர்த்தமிருக்கு


“ கருப்பு தொப்பி போட்ட வெள்ளைகாரங்க தான் சும்மா கிடந்த எங்க பூமிய சுமயில்லமா பிரிச்சது”
கடல கிழிச்சு வார கப்பல் மாதிரி கானல் நீர கிழிச்சு கரைதேடி வருது ஒண்டரை மணி வண்டி ஊர பாத்து “காமினி பஸ் செர்விஸ்"

..............................................

(ஊருக்குள்ளயிருந்து...)

“ஒத்த பனைக்கும் ஒத்தையடி பாதைக்கும் ஊருக்குள்ள பேரேண்ட காரக்குடிதன், ஆனா இதையெல்லாம் பாகொனுமெண்ட ஊருக்க போகோணும் போடினடைய பத்து கிலோமீட்டர்.”
தங்க ஊரு பெருமைய மூலக்கடயில அவுத்து விட்டாரு ஊரு பெரிய மனுஷன் சிவப்பியர்.


“பதினெட்டு வருசத்துக்கு முன்னால ரெண்டு பிள்ளையையும் நாட்டுக்கு குடுத்தியே சிவப்பி; இன்னும் ஒரு வழிய காணோம்”
பழைய பாயில ஏதோ போனத போல சிவபிகிட்ட புறுபுறுத்த செல்லயருக்கு கண்ணுல தெரியுது ஏக்கம்.


“என்ன இருந்தாலும் பனமரத்து கிழயிருந்து உவன் பள்ளன் இறக்கிற கள்ளக் குடிச்சு காரமா ரெண்டு வெங்கயாத கடிச்சா பின்னேர வெய்யில் பனியா குளிருமப்பா”
இழந்து போன சோகத்த மது போத கதையில கொஞ்சமா கரச்சறு சிவப்பி.



“உண்மைதான் சிவப்பி இந்த யாழ்ப்பாண எல்லேக்கையே காரைக்குடி கள்ள அடிக்க எந்த ஊர் கள்ளிருக்கு, பனைய மூடிக்கட்டி அடுத்த நாள் காலையில இறக்கிற பதநீர்ல ஒரு சொட்டு வினாகிரி விட்டு பின்னேரத்தில ரெண்டு சொட்டு நாக்கில விட்டா கரும்பும் கசக்குமப்பா”


பின்னேரத்து மகிழ்ச்சிக்கு பாட்டு பாடினாரு செல்லையர்.

.....................................................



“காரைக்குடி வந்திரிச்சி இறங்கிரவங்க இறங்கிங்கப்பா”
எத்தின வருசமாச்சு பஸ்ல இப்பிடியொரு பேச்சுகேட்டு நடத்துனர் சொன்னதும் இத்தன நேரமா கேட்ட தமிழ ஒரு நொடி நினச்சிட்டு நிம்மதியா சுவசிச்சான் சமாதான காற்ற.


எங்க மண்ணிட ஒவ்வொரு கூரையும் அணுவணுவாய் அலசிப் பார்த்தவன் இவன்தான், உடைஞ்சு போன கட்டிடத்தையும் இடிஞ்ச வீட்டிட எச்தையும் வெட்ட வெளியில மிச்சமாபர்திட்டும் நம்ம பூமியில இனி எதிரவன் இல்லையெண்ட களிப்பில் ஆசனம் விட்டு எழுந்தவன் மாறன்.


கருத்த உடல் சுருண்டு வளர்ந்த முடிகளுக்கிடையில் செல்லமா எட்டி பார்த்த சின்ன சின்ன நரை முடி, கோவக்கார கண்கள், சின்ன வயசில வீட்டு பழசு மூக்குபிடி மூக்குபிடின்ன மூக்க இழுத்த கிளி மூக்கு, வரிசை சொல்லி கொடுத்த பற்கள்ள கடவாய் பல் மட்டும் தெத்தி, முறுக்கியும் முறுக்காத ஒரு மீசை, ஒரு வாரமா சவரம் சாயாத தாடி, எங்கேயோ மரபு கவிதையில் வாசித்த மாதிரி அகண்ட தோல் பட்டை விரிந்த மார்பு, ஒற்றையடிப் பாதேலையும் சாத்தியமாய் பாயும் கால்கள், ஆயுதம் ஏந்தியே மரத்துப்போன கைகள், இதெல்லாம் இருந்தும் பல நாளா பட்டினி போட்ட உடல்,


மேலேயிருந்த கருத்த பைய எட்டி எடுகயில கிழயிருந்த செருப்பு ஏதோ புறுபுறுக்க, மெல்லமா பார்த்து நொண்டிய நடக்கயில பேருந்து நடத்துனர் சொன்னான்

“நேரமாச்சு கெதியா இறங்கண்ண எண்டு”



வண்டி கடைசிப்படியில கால வெச்ச மாறனுக்கு இந்த பூமியில வைக்க தயக்கம் ஏனோ,


“இந்த எல்லையின் ஒவ்வொரு மண் பிடியிலும் விதைக்கப்பட்ட ஒரு உசிரின் மூச்சிருக்கு, ஒரு வருசமா ரெண்டு வருசமா முப்பது வருசம் முழுசா முடிஞ்சும் மூத்த தலைமுறை கண்டதை இன்னும் காணோம்


எப்படி என் கால்கள் இந்த பூமியை தொடும்,


வண்டியில நிண்டு வரலாற ஒரு கோடு போட்டு சிந்திய இரத்தமும் சிதறிப்போன போன உடலும் இந்த மண்ணுக்கு தானே மாதிரியா போயிற்றே. மாண்பு மிகு பூமியில் மதிப்பில்லா என் கால்கள் எப்படிப் பதியும்.

போர் முனையில் கால் இழந்து, அரைஉசிர கையில பிடிச்சு மீதி உசிர குப்பிக்கு குடுத்த என் குப்பன்கள் சாய்ந்த மண் இது, நான் சாயினும் என் கால்கள் மிதிக்கப்போவதில்லை.

எம் மண்ணின் இனம் காக்க வீட்டுகொரு தலை கொடுக்க குத்த வெச்ச அக்காவ அம்மா கையில குடுத்திட்டு சிட்டாய் சிப்பாய்க்கு போன தம்பியும், குட்டி தம்பி நீயிருட உன் அக்கா நானிருக்கேன்னு பாசத்தின் தவிப்பா படலேக்க புதைச்சிட்டு எங்கெங்கோ போய் ஏற்றதெல்லாம் கற்றுக்கொண்டு மிச்சமிருந்த பாசத்த துப்பாக்கி முனையில துளைசுப்போன என் தங்கையின் உடலை சர்வமும் கொண்டு மிதிச்சு செல்வேனோ.”



கண்மூடி ஒருநிமிஷம் நிகழ்ந்ததெல்லாம் நினைத்திருக்க கண்டவன் அனுப்பின கார் மேகம் சொல்லிச்சு

" விதைக்கப்பட உன் இனம் புதைந்து கிடப்பது எதிரவன் மிதித்த பூமியல்ல அவன் சுவாசித்த காத்திலெண்டு"



இத்தனையும் நினச்ச பின்பும் மாறாத மனதுக்காய் மண்டியிட்டு முத்தமிட்டான் மாவீர மண்ணுக்கு.


"மணியண்ணே ரைட்"
தமிழனுக்காய் இருந்தும் மறையாத ஆங்கில கலப்போடு வேகமாய் பறக்குது காமினி பஸ் சேர்விஸ்.



விளையாட்டு தொடரும்....

Tuesday, 26 May 2009

கல் அன்றெடு காதல் செய்

திங்களொடு பரிதிதனில்
நின் விழி சேர் மருவில்

பாலொடு தேனினிது
பருவமுன் உடல்தொடுதின்

காரிருள் நீளருவம்
நறுகூந்தால் நிலந்தொடுதின்

புன்னகை தொடு வெட்கம்
காதலிவன் கை தீண்டின்


மஞ்சமொரு பஞ்சு தலை
யணைத்தொரு துணையெனில்
கன்னியிவள் கன்னமதில்
தொடரிடு முதல் முத்தம்


வெட்கமொரு சேலைதனில்
தொலைத்திடு விரல்நுனிகள்
சொல்லுமொரு ரகசியமது
பொன்னியின் மறுதலை


அச்சமோடு நாணந்தனில்
கொன்றிடு பெண்மையது
மடத்தோடு பயிர்ப்பதை
செப்பிடு சீதை என

முத்தமது இச் என
மறைத்திடு நாச்சுவை

கலையது கொள் என
காண்பது விழிச்சுவை

வருடலின் தொடுவென
நினைப்பதில் மெய்ச்சுவை

குழலது வாழ்மல்லி
உயிரொடு நறு மணச்சுவை

காதலோடு காமஞ்செய்
உணர்வது ஜஞ்சுவை

கவியொடு உவமைகள்
சேர்ந்தெழுதென்றில்
நின் அழகோடு இறகது
வரை ஓவியம்


நெற்றி யொடு வழிநீர்
அழித்திடு திலகமெனில்
ஒட்டுமொரு துடிஎன
சேரது உயிர்க்கொடி


தொடுதலின் அணை நாளிகை
தொடர் திருடு மதில் சேர்க்கை


இரவது பகலது
இறை வரை மூர்க்கம்
காதலோடு தீண்டலது
கடை வரை இலக்கியம்


எத்தனை நிமிடமது
கையொடு அணைத்தெழ
அத்தனை நிமடமென
கண்ணீர் கரை காதல்

மரண நொடிதனும்
செவ்வென இவ்விச்சை....


செய்தது செய்தென
மறியாத மஞ்சனை...

பஞ்சொடு கமலமததில்
இலக்கண மறை 'எச்' சங்கள்
வாழ்வோடு வாழ்தனில்
சூளிருள் 'மச்' சங்கள்

தொடுதலில் தீண்டலில்
தொடரிடு சுகமிது
பிறப்பித்து தொடரெனில்
தொடுதென முதல் சுகம்


நின்னொடு நின்னுயிர்
காப்பதும் காண்பதும்


களைந்திடு கவலையது
கனிந்தொரு தொடர்காதல்....

நின்னொடு னானது
தொடுப்பது கையன் றில்

உயிரொடு உடலது
பிரிந்திடு உறுதி

அன்றில் நின்றன்
ஆத்மாவின் நிழலொடு
தொடர் வாழ்.....

Monday, 25 May 2009

நாய்கட்கா ஜனநாயகம்...

ஆளும் அரசியல் கட்சி
அரசியல் அரியாத்தலைவன்
தொங்கும் வாக்குச்சாவடி
அடிக்கடி தொலையும் வாக்குப்பெட்டி
வன்முறைக்கான தேர்தல்காலம்
தேரிய வருமானம்

இத்தனையிருந்தும் தேடுகி றோம்
இடையில் ஒரு ஜனநாயகம்

எங்கே ஜனநாயம்?


மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவன்
நீ தானா?

வாக்குகள் மட்டும் உன்னுடயாத?
கட்ச்சிகள் உனக்கில்லையா?

மக்களின் தேர்வென்ராய்
சரி
எதனடிப்படையில தேர்ந்தெடுப்பது
பணத்தின் அடிப்படையிலா? பதவியின் நோக்கத்திலா?
வாக்குகளுக்காக அரசியல் செய்யும் கட்ச்சிக்காகவா?
அறியாமையை தூண்டும் தலைவனுக்காகவ?

இல்லை
ஒரு பிடி அரிசிக்கா? கைப்பிடி சீனிக்கா?
மா விலைக்கா?
இல்லை
மாபெரும் போராட்டங்களுக்ககவா?

புரியவில்லை இந்த பாமரனுக்கு

புறப்படுகிறேன்
அடயலாட்டையை மறக்காத
குழப்பங்கலோடு வாக்குச்சாவடிக்கு
பாதியிலே ஒரு நன்கொடை
பரவாயில்லை
சின்னம் மட்டும் ஞாபகம்

வாழ்கையோடு போராடும் எனக்கு
எதற்கு அரசியல்? என் இந்த வாக்குரிமை?
சொல் ஜனநாயகமே....


உனது நாட்டில் வாக்குரிமை
மக்கட்பண்பாம்...
இந்தப்பைதியக்காரன் புரியவில்லை
உன் நாட்டில் மக்கட்பண்பு
வாக்குரிமை மட்டும்தானென்று...

எனக்கோ அறியாமை
எவன் எழுதிவைத்தான் ஏட்டை
விதிமுறை சொல் உன் தெரிவிற்கு...
ஆயிரம் சட்டம் வாக்குச்சாவடிக்குள்
தேர்ந்தெடுக்கப்படுபவனுக்கு சட்டம் தான் என்ன?

மூடி மூடி மறைத்தது போதும்
முழுதாய் உன் விதிமுறை சொல்...?


வேட்டிக்கும் சட்டைக்கும்
அரசியல் செய்வதா?
சாதிக்கும் இனத்திற்கும்
தலைவனை தேடுவதா?

புரியவில்லை உன் விதி
இந்த அறிவில்லாதவனுக்கு

ஜனநாயகமே எது நீ?

தேர்தலுக்காக மட்டும் கும்பிட்டவனை
பாரளுமன்றம் அனுப்புகிறோமே அதுவா?
அரசியல் அறியாதவனை
உலகாரசியலில் சம்மந்த்தப்படுத்துகிரோமே அதுவா?
அறியாமை கண்டவனை
யாப்புகள் படிக்கச்சொல்கிறேமே அதுவா?
தலைவன் என்றவனை
தலையில் சுமக்கிறோமே அதுவா?

எதில் இருக்கிறாய் நீ?

அது சரி
ஜனநாயகத்தில்
ஏது தலைவன்? ஏது கட்சி?

மக்களின் பிரதிநிதி தான்
தலைவனோ
பாமரனின் சேவைச்சங்கங்கள் தான் கட்ச்சிகளோ?

மன்னித்து விடு
புரியவில்லை இன்னும்...

புரட்சிகளின் குழைந்தயா நீ?
அமெரிக்கசுதந்திரப் போர் உன் தாய்
ரஷ் யப் புரட்சி உன் தந்தை
பிரெஞ்சு புரட்ச்சி உன் செவிலி

நீ நோக்கங்களுக்காகப்பிறந்தவன்...

கலியுகத்தில் நீயும் கலங்கமா?

பெற்றவன் புரட்ச்சிஎன்பதால்
ஆயுதக்கலாச்சாரம் மறக்கவில்லையா?
நோக்கம் மறந்த நீ இனி எதற்கு...
கலக்கப்பட்டவனே எதற்கு அரசியலில் பாரமாய்?

மறைந்து போ ஜனநாயகமே
நாய்கட்டு தான் நீ இனி..

அறியாமை ஒழிந்து
அரசியல் அறிந்து
தவழ்ந்து நட
மக்கா நீ புதிதாய் படைக்க
ஒரு அரசியல்...

பொதுநலம் கடைப்பிடி
கொள்கையில் மாறாதே
மனிதம் தேடு
பிரதிநிதி தேர்வுசெய்

அரசியல் கல்
வரலாறு படி
சிந்தனையில் செயற்பாடு
அறியாமை ஒழி
எழுந்து நட...

சீ போகட்டும்..
எனக்கென்ன..
நடப்பது நடக்கும்...
என்னால் முடியுமா?...
இவன் பைத்தியக்காரன்...
வார்த்தைகளை கொலைசெய்

ரகசிய ஒப்பந்தம்..
அரசியல் நகர்வு...
தேச தந்திரம்...
என் நாடு...
பிரதிநிதி சொன்னால்
புரட்சி கிளப்பு ஆட்சியிரக்கு....

பாரளுமன்றம் செல்பவன் உன் சேவகன்...
அவன் பேசுவது உன் வார்த்தைகள்..
ஆட்சி உன்னுடையது..
நாட்டுக்குள் தந்திரமா உனக்கும் தெரியவேண்டும்..
வெளிநாட்டு கை குழுக்கள்கலா எதற்காக?
அறிந்து கொள்

உன் ஆட்சி
உன் மக்கள்
நீ தான் ஆழ்பவன்
நீ தான் அரசு

ஒவ்வொரு தனி மனிதனும்
என் கடமை
என்றிரு

தானாய் பிறக்கும்
புதியதொரு அரசியல்
இனி....

வங்கக்கடலின் வங்காளம்

கையில் ஒரு ஆயுதம்
கொடுத்தவனே பறிக்கையில்
ஆயுதமும் கொஞ்சம் பேசுகிறது...

ஏய் வங்கத்தமிழனே...
மானங்ககாக்க மாற்றான் உயிர் கேக்க
உன் மானத்தலைவன் அனுப்பிவெச்சான்
கொஞ்சம் மாவீர மண்ணுக்காய்...

கேட்கிறாய மறுபடியென்னை
உன் சிதறிப்போன சிந்தனைகளுக்காய்..

பதவி நிறுத்த பணம் பார்க்க
அழிக்கிறாய் ஜனநாயகம்
விதைக்கிறாய் இன வெறி

உன்னைப்போல் ஒரு பிறப்பா நானெடுத்தேன்
மானம் பறிபோக சேரா இடம் சேர...

கொடுத்தவன் ஒருவன் வாங்கியவன் மற்றொருவன்
அழிப்பதோ கொலையாளி வதைப்பதோ ஈழமண்ணை
எவன் குற்றம் இங்கே?

கொடுத்தவனா ? வாங்கியவனா ?
அழிப்பவனா ? அழிக்கப்படுபவனா ?

வங்கக்கடலில் நடக்குது ஆயுதவிழையாட்டு
உயிர் மட்டும் போகுது ஈழத்தமிழனுக்கு...

எத்தனையோ ஒப்பந்தங்கள்
இரகசியமாய் பரகசியமாய்
மூன்றாம் தரப்போடு
முழுமையடையா இணைப்போடு

பண்டா செல்வா என்றான் ஒருவன்
ராஜீவ் ஜெ.ஆர் என்றான் மாற்றுவன்
ரணில் பிரபாவில் முடிக்க நினைத்தான்
அத்தனையும் எங்கே அவசரமாய் அழிந்ததோ?

அழித்தவன் எவன் இங்கே
கொடுத்தவனா வாங்கியவனா
அழிப்பவனா அழிக்கப்படுபவனா
எவன் குற்றம் இங்கே?

உன் எல்லைகளோடு விழையாடக்கிடைத்தவன்
ஈனமாய் போன ஈழத்தமிழனா?

காந்தியென்றாய் புத்தன்னென்றாய்
புண்ணிய தேசமமென்றாய்
உன் பூமியின் ஒரு பிடியில்கூடவா
இரக்கமில்லை?

ஏய் சுயநலவாதியே
அடிப்படை உன்னுடையது
வேர் நீயிட்டது
ஆயிரம் இலைகள் உதிருகையில்
வேரை மட்டும் காப்பாற்றுகிறாயா?

வங்கக்கடலில் நடக்கிறது ஆடுபுலியாட்டம்
எப்போதும் ஆடுகள் ஈழத்தமிழனா?

மாநிலத்தோடு மத்திக்கு இணையில்லை
இணைக்க வழியுமில்லை
பாவம் என் பாமரன்
இன்னும் பட்டினிப்பிரவேசம்...

அலையலையாய் படைகள்
மாநிலத்திற்கு சம்மந்தமில்லை
கப்பல் நிறைய ஆயுதம்
மத்திக்கே பழி
ஒரு இனமே எரிகிறது
இருந்தும்மென்ன
என் வீட்டில் நூறு ரூபாய் நன்கொடை


அறியாத என் இனம் அவதிப்படுகிறதே
ஜனநாயகத்துக்குள் அகப்பட்டு...

வரலாரோடு ஒரு போராட்டம்
ஏட்டில் எழுத நாதியில்லை
இனமோ பாமரன் என்ராயிற்றே
இனி ஏது
உனக்கு வழி

பரவாயில்லை
நீ
பாரதியை விரட்டியவன் காந்தியை கொன்றவன்
கட்டப்பொம்மனை காட்டிகொடுத்தவன்
உயிர்கள் போகையில் சாஸ்திரம் படித்தவன்
உடல்கள் அழிக்கையில் ஜாதி கேட்ப்பவன்
உன்னிடம் ஏது அறிவுடைமை?

வங்கக்கடலில் நடக்குதொரு அரசியல் சூழ்ச்சி
சுலறுபவன் மட்டும் ஈழத்தமிழனா?



தீர்ப்பு எழுத வருபவன் எவனோ?

பாரதி உன்மேல் தான் குற்றம்
" நம் நாட்டவன் சண்டை செய்யினும்
சகோதரன் அன்றோ"
என்றாய்
பாடையிலே இனம் போகையிலும்
சகோதரனோடு குலுக்குகிறான் கை
எவர் குற்றம் கண்டீர் பாரதி?

பாலமமைத்து பணிபுரிபவனே
பலம் கொடுத்து அழிக்கையில்
தீர்ப்பு எழுத எவன் வருவன்
கண்டீர் பாரதி உம் கவி சொன்ன நோக்கம்...

உலகெலாம் மொழி பரவ
உம் கவி வெற்றிக்கான
ஈழத்தமிழனை துரத்துகி றாய
உலகெல்லாம் அகதியாய்
எவர்மேல் குற்றம் சொல்ல பாரதி?

நீவீர்
விரட்டியடித்தவனே நிற்கிறான்
மனித நேயத்தோடு
உம் தேசத்தின்
ஒரு மொழிகேட்டு

என்ன சொல்லப்போகிரீர்
புதுமைக்கவிஞ்ஞனே...

புதிதாய் ஒரு வங்காளம் நீவீர் படையும்
தமிழனையும் இனத்தின் பால் காதல் செய்ய...

எரியும் தேசம்

பற்றி எரிகிறது தேசம் பார்த்துகொண்டிருக்கிறேன்
தலையணையில் தலை வைத்து

பாசமில்லை பரிவில்லை
மனிதமில்லை மானிடத்தொல்லை
அத்தனையும் நடக்குது என் தேசத்திற்குள்

மார்புக்குள் ஈரம் ஈரத்திர்குள் தாகம்
தடுமாறுகிறது வாழ்வியல் தடுக்க ஒருவழியில்லை

கேட்டதோ
பிறந்தமண் வழ்ந்தமண்
என்வீடு தாய்மனை
அத்தனையும் மறுக்கப்படுகிறது மாற்றானொருத்தனால்

பார்க்க மட்டும் வழிகிடைத்த
என் பார்வைக்கு
கரிசனை சொல்ல வழி ஏது?

பற்றி எரிகிறது தேசம் பார்த்துகொண்டிருக்கிறேன்
தலையணையில் தலை வைத்து



யாரங்கே என் தாயா மரணித்துப்போன
என் சகோதரனை மார்பில் தாங்குவது...
பக்கத்தில் யார் அட என் சகோதரி
மனை புகுந்தவனால் மானவங்கபடுத்தப்பட்டு..
கூட ஓடுவது என் தந்தையா
ஒற்றைக்கால் எங்கே? தாய் மண்ணிற்கு தானமா?..
கீழே கிடப்பது
ம்ம்... உறவுக்காரர்களின் உருகிப்போன உடல்கள் ..
அங்கே ஒரு உளறல்
பரவாயில்லையே
பிணங்கள் கூட கத்துகிறதே
“காப்பற்றுங்கள்” என்று
மன்னித்து விடு
நீ பிணமில்லயா?
உயிரைப்பிடிச்சு வைத்திருக்கும்
என் தம்பியா?

பற்றி எரிகிறது தேசம் பார்த்துகொண்டிருக்கிறேன்
தலையணையில் தலை வைத்து

ஓடுங்கோ ஓடுங்கோ அடிக்கிறாங்கள் அங்க
ஒடுறதுக்குள்ள விழுந்துட்டு, மகன் அதிலேயே சரி..
பிள்ளைய காணோமே.. அம்மா எங்கே?
ஐயோ ஏன்டா பிள்ள.. ஐயோ ஏன்டா அம்மா..
ஐயோ அப்பா.. ஐயோ கடவுளே...
வானுக்கும் கேக்கும் சத்தம்
என் செவிக்கு மட்டும் கேட்கலையே

அரிசி கொஞ்சம் பருப்பு கொஞ்சம்
சேர்த்து வெச்ச துணி கொஞ்சம்
காணிப்பத்திரம் அடையாள அட்டை
பாயொண்டு படுக்கையொண்டு
சொட்டுமருந்து புட்டிப்பால்
காத்துப்போன சைக்கிள்ள கட்டி,
போற இடம் தேடயிலே
வா என்றழைக்க
வாயில்லை என்னக்கு மட்டும்


பற்றி எரிகிறது தேசம் பார்த்துகொண்டிருக்கிறேன்
தலையணையில் தலை வைத்து


அதோ வருகிறார்கள்
ரத்தத்தில் தோய்ந்த என் உறவுக்காரர்கள்...
கர்ப்பிணித் தாயோன்று பிரசவம் நடத்தி
தங்கையோன்று அவசரமாய் பூப்பெய்தி
அறைக்குள் நடக்கும் தமிழர் பண்பாடு
அம்பலத்தில் நடக்கிற பரிதாபம் இங்கே

இது என்ன இது
அதற்குள் பிள்ளையொன்று
அழுகிறதே பாலுக்கு
மார்பில் பால் சுரந்தும்
பசிதீர்க்காமல் கதறுகிறதே தாய்மை..

முடிப்பதற்குள் இன்னொன்று
"அம்மா பசிக்குது" கேக்குது பிள்ளையொன்று
"பேசாம நடந்து வா" சொல்கையில்
பற்றி எரிகிறதே தாய்வயிறு..

இவையெல்லாம் எம்மாத்திரம்
அங்கேயொன்று
காலிழந்த தமையன் கதறி அழுகையிலே
சாகட்டும் போ காப்பாத்த வழியில்லை
உயிரைப் பிடிச்சிட்டு வாறானே தம்பி..

அகமும் காதல் வைத்து புறமும் வீரம்கொண்ட
என் இனம் வாழ இடம்தேடயிலே
கட்டியணைக்க கையில்லை எனக்கு

பற்றி எரிகிறது தேசம் பார்த்துகொண்டிருக்கிறேன்
தலையணையில் தலை வைத்து

உறக்கம் தொழைத்த உணர்வுகளை
பகிர்ந்துவிடேன் கண்ணீரோடு..
முடிவுரைக்கோ வழியில்லை

என் இனமே என் சனமே
உணர்வுள்ள தமிழனே
எழுது ஒரு முடிவுரை நீ
என் கவிக்கல்ல
இனி வரும் தமிழினத்திற்கு..

எழுதிக்கொண்டே அழுத எழுதாத என் கவி...

எழுதாத என் பேனா எழுதுகிறது உன்னை பற்றி
“ அம்மா ”

மாதம் பத்து சும்மந்து தள்ளி
மண் தொட்டு வளர்த்தினால்
தாய் நீ பற்றி எழுதாமல் போனேனோ...

தொட்ட மண் கையில் இல்லை சுமந்த வயிறும் அருகில் இல்லை
போனால் போகட்டும் எண்டு பேனாவிடம் சொல்லிலேனோ...

உடல் தந்து உயிர் சுமந்து உருவஞ் செஞ்சு பெத்த பிள்ளயேன்னு பாசம் காட்டி பரிவு சொல்லி
பொத்தி பொத்தி வளக்கிறண்டா என்னு- சொல்லி
சொல்லி வளர்த்தினால் பாசம் மறந்து தொலைந்து போனேனோ...

அரைக்கோதுமைக்கு ஒரு அரிசி மா எடுத்து சுடுதண்ணி உப்பு விட்டு பதமா குளைச்சுவச்சு
தேங்காய் பூவோட நீ செஞ்சு தந்த புட்டு , நாவில இல்லேன்னு எழுதிட மறந்திலேனோ...

காலையில கண்விழிச்சு பள்ளிக்கு அனுப்பயில நெனச்சு நின்ன என்னென்ன..
வங்கியில வேல செஞ்சு வருத்தபடமா பாப்பியோட..
மருத்துவம் படிச்சிட்டு கடைசியில காப்பனோ
இயந்திரத்தோட இணைச்சு நின்னு இயல்பா உன்ன அனைப்பானோ
அத்தனையும் தொலச்சிட்டு பிரிஞ்சேனே வானத்தில..


அழுத கண்ணோட பண்டாரநாயக விமானநிலையம் அனுப்பி வக்கயில உன் மனசுசொன்னது எத்தனையோ..

அதனையும் கேக்குதம்மா ,

கைதனியா போறியே கவனமா போய்டுவாடா...
வளர்ர உடம்புடா வேளா வேளைக்கு சாப்பிடு...
பனிக்குள்ள நிக்காத தடிமன் பிடிச்சிடும்...
ஒழுங்கா பாடிட அம்மாவ மறக்காத...
வார்த்தையில சொன்னதெல்லாம் மனசுல நிக்குதேம்மா

காலமெல்லாம் உன்ன மனசிலேயே நினச்சதினால்
கவிதேல எதுக்கென்னு எழுதாமல் போனேனோ..

பிரிஞ்சாலும் நெனச்சுக்க என் நெனபிருக்கு உன்கிட்ட
அது கூட இல்லாம நிக்கிரேனே ஒத்தயில

பக்கத்தில கார் இருக்க படுத்திருக்க மெத்தை இருக்க
பருவம் இனித்திருக்க பணமும் கூட இருக்க
கடைசியா பார்த்த உன் அழுத முகந்தனே நெஞ்சில...

மண்ணும் எனக்கிருந்து மானமும் துணை நின்னா
காலம் முழுதும் அணச்சிருப்பேன் என்னோட...

இனமே இல்லயேன்னு அழித்தொழிக்கையில பாசம் ஏத்துகிடன்னு ஏக்கத்தோட தள்ளி வெச்சியோ...
பால்குடுக்க தாயிட முலைகூட ரத்தம் மென்னு உன் ரத்தம் குடுத்த என்ன தொலச்சிட்டு நிக்கிரியோ...
உசிரிட அருமை தெரிஞ்சது நீ ஏன்னு உசிரா பாத்த உன் மகன உசிரோட மறச்சு வெச்சியோ...

பக்கம் மட்டும் இல்லேன்னாலும் உசிரா இருக்குன்னு நிம்மதியா உறங்கிறியே
அதுகூட இல்லாம கையில கிடக்கிதே கை குழந்தயொன்னு பிணமா...

கத சொன்ன பாட்டு சொன்ன வரி வரியா பாடம் சொன்ன என் கவிதா உன்னக்கெங்க புரிஞ்சிடுமோன்ன செருக்கில சொல்லிலனோ உன்பெரும...

கடைசியாய் எழுதினேன் கண்ணிறோடு ஒரு கவிதை , அம்மா உன க்கு..

மறந்தது என் பேனா,அம்மா உன்ன மட்டுமல்ல...
உணர்வால செத்து போயும் உசிரோட புதைஞ்சு போயும் மனசாட்சி ஏதுமின்றி மரத்துப்போன என் மண்ணையும் தான்

மறக்கிறேன் மறைக்கிறேன் இத்தோடு உணர்வை ,தொடரட்டும் இயல்பு மறைக்க பட்ட உணர்வுகளோடு, வழமை போல்....