திங்களொடு பரிதிதனில்
நின் விழி சேர் மருவில்
பாலொடு தேனினிது
பருவமுன் உடல்தொடுதின்
காரிருள் நீளருவம்
நறுகூந்தால் நிலந்தொடுதின்
புன்னகை தொடு வெட்கம்
காதலிவன் கை தீண்டின்
மஞ்சமொரு பஞ்சு தலை
யணைத்தொரு துணையெனில்
கன்னியிவள் கன்னமதில்
தொடரிடு முதல் முத்தம்
வெட்கமொரு சேலைதனில்
தொலைத்திடு விரல்நுனிகள்
சொல்லுமொரு ரகசியமது
பொன்னியின் மறுதலை
அச்சமோடு நாணந்தனில்
கொன்றிடு பெண்மையது
மடத்தோடு பயிர்ப்பதை
செப்பிடு சீதை என
முத்தமது இச் என
மறைத்திடு நாச்சுவை
கலையது கொள் என
காண்பது விழிச்சுவை
வருடலின் தொடுவென
நினைப்பதில் மெய்ச்சுவை
குழலது வாழ்மல்லி
உயிரொடு நறு மணச்சுவை
காதலோடு காமஞ்செய்
உணர்வது ஜஞ்சுவை
கவியொடு உவமைகள்
சேர்ந்தெழுதென்றில்
நின் அழகோடு இறகது
வரை ஓவியம்
நெற்றி யொடு வழிநீர்
அழித்திடு திலகமெனில்
ஒட்டுமொரு துடிஎன
சேரது உயிர்க்கொடி
தொடுதலின் அணை நாளிகை
தொடர் திருடு மதில் சேர்க்கை
இரவது பகலது
இறை வரை மூர்க்கம்
காதலோடு தீண்டலது
கடை வரை இலக்கியம்
எத்தனை நிமிடமது
கையொடு அணைத்தெழ
அத்தனை நிமடமென
கண்ணீர் கரை காதல்
மரண நொடிதனும்
செவ்வென இவ்விச்சை....
செய்தது செய்தென
மறியாத மஞ்சனை...
பஞ்சொடு கமலமததில்
இலக்கண மறை 'எச்' சங்கள்
வாழ்வோடு வாழ்தனில்
சூளிருள் 'மச்' சங்கள்
தொடுதலில் தீண்டலில்
தொடரிடு சுகமிது
பிறப்பித்து தொடரெனில்
தொடுதென முதல் சுகம்
நின்னொடு நின்னுயிர்
காப்பதும் காண்பதும்
களைந்திடு கவலையது
கனிந்தொரு தொடர்காதல்....
நின்னொடு னானது
தொடுப்பது கையன் றில்
உயிரொடு உடலது
பிரிந்திடு உறுதி
அன்றில் நின்றன்
ஆத்மாவின் நிழலொடு
தொடர் வாழ்.....
Tuesday, 26 May 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment