Friday, 29 May 2009

பனையோடு விளையாடி... அத்தியாயம் 2


ஊரோரப் புளியமரம் பக்கத்தில தென்னந்தோப்பு பாகமாய் பாத்த வளராத ரெண்டு பூவரசன். ஒரு மாசமா தண்ணி விட்டும் ஆறு நாள மழபெஞ்சும் ஆறடி போகாத ஆறு பலாக்கண்டுக்கு ரெண்டு பலா மரம். சுத்தி முத்தி பாத்த நாற்பது மரவெள்ளியோட இருபது கத்தரிச்செடி.

பருவம் வந்த வாழப்பூவ பதம் பாத்த காக்காயா எச்சில் கையால துரத்தி அடிச்சார் சிவப்பியர்.

உள்ளேயிருந்த மங்கம்மா திண்ணைய நோக்கி சொல்லிச்சு
" இன்சாருங்க உந்த காக்காயா விட்டிட்டு கெதியா சாபிடுங்கோ" ன்னு

பதமா செஞ்ச சோத்தையும் பாவக்க குழம்பயும் முட்ட பொரியலோட மூக்க பிடிச்சிட்டு முந்தின கத பேச கிளம்பிராறு முலக்கடைக்கு.

“சொன்னது சொல்லிப்போக செஞ்சது செஞ்சுபோக கட்டினவ பேச்ச கரைபடமா முடிக்கிறனே”
தன்னையே கேட்டாரு ஒரு கேள்வி.


"ஏனப்பா வார சனிக்கிழமை மாறனோட திவசம் வருதே ஞாபகம் இருக்கோ" நாளயாண்டேக்குள்ள கடைக்கு போய் சாமான் வாங்கோணும்.

“இந்த மனிசனுக்கு வர வர வண்டீல மாட்டப் பூட்டவே ஞாபகம் வாரதில்ல" அவிச்சு வச்ச பனங்கிலங்க உரிச்சு கொண்டே கேக்கிறா மங்கம்மா.


மறந்து போன ஞாபகத்த மனசுக்குள்ள தேடீட்டு மரத்துப்போன நெஞ்சோடு கிளம்பிராறு முலக்கடைக்கு
( மத்தியான மசக்கயில செல்லையர் ஞாபகத்துக்கு வர பனங்கல்லு வாசனையும் வந்து போகுது)

------------------------------------------------------------------------------------------------------




கையில ஒரு கருத்தப்பை அறுந்து போன செருப்பு எங்கேயோ பார்த்த மாதிரி புதுசா பாத்தான் காரைக்குடிப் பெயர் பலகைக்கு பக்கத்தில நிண்ட சொந்த ஊர்க்காரன் கலைமாறன்

பட்டணத்து பஸ் வாரத்துக்கெண்டே அகலமாப் போட்ட வீதி ஏதோ மழபெஞ்ச சந்திரன ஞாபகப்படுத்தும். தூரப்பர்த்தா ஏதோ வெள்ளித்தட்டும் வெண்கலப்பதக்கமும் தான் கிட்டப்போயி மெல்லப்பார்த்த கிடக்கிற குண்டுகுழியெல்லம் முன்சீலதான்

செல்லத்தாயி சொல்லிறதிலயும் உண்மையிருக்கு எங்கேயோ கிடக்கிற நிலவுக்கு காதலிய ஒப்பிடிறியே இதுக்குத்தான என்டு.





வீதியோரம கிடக்கிற பஸ் நிலையம் ஊரு சனத்தையே பெருமப்படுத்திது. நாலுபக்க பெட்டீக்க மூண்டு பக்கம் மட்டும் முழுசா மூடி வெளிப்பக்கமா திறந்த வாசல் வெச்சு விலாசமா ஜன்னல் கட்டி வெள்ளயடிச்ச பூச்சுக்க கிழிஞ்சுபோன சுவரொட்டீக்க வெள்ளைய தேடினாலும் ஆறுமாசமா ஒட்டின கிழிஞ்சல்கள் பட சுவரொட்டி மட்டும் வெள்ளப்பூச முழுசா மறைக்குது. எங்க ஊருக்கு வார சனம் வெய்யில்ல வேகாக்கஊரு சனம் கூடிக்கட்டினது இந்த சின்ன மடம் பேரு மட்டும் காரைக்குடி பஸ் நிலைய மனை

முன்னால சுந்தரம் மாஸ்டர் வீடு பின்னால விழுது விட்ட ஆலமரம். தூரமா தெற்குப்பக்கம் காத்தடப்போன ஆலங்காடி கூடிர வேப்பமரத்தடிச்சந்த, ஊருக்கு ரெண்டு செட்டி கட, ஒருமாரி ஆட ஒருவத்தம்மன் கோயில் துணைக்கு ஒரு பிலாவடிப்பிள்ளயார், நாலா பக்கமும் டீடிப்பாத்தா நாலு முலக்கட மூணு வெதுப்பகம் டீக்கடையோட மூண்டில ரெண்டு மூக்கயனுக்கு சொந்தம்.

இது போக இருபது ஒத்தயடிப்பாத ஆறு மேட்டுப்பள்ளம் அறுபது வாய்க்கால் வயலுக்க பதினஞ்சு குறுக்குச்சந்து பதினாறு மூலச்சந்து. எழுபது வரப்பு தோட்டத்தோட கிடக்க.

மொத்த ஊருமே வந்து போகிது ஒரு நிமிசத்தில, வந்ததில ஒன்னயுமே காணோம். மிச்சமா கிடக்கிற பெயர்ப்பலகயோட ஏதோ பேச்சுவார்த்த செஞ்சிட்டு காணாத ஊற தேடிப்போறான் கால்நடையா.





போரவழியில காணாதது சனத்தையும் வேளிகளையும் தான் மனசுக்குள்ள மாமன் மச்சான் பேசிறதெல்லாம் மனப்பாடமா கேக்கிது, ஊரு சனத்திட உலருவாய் பேச்செல்லாம் காதுக்குள்ள கத்திற கவுளிச்சத்தம் மாதிரி.

சாதி பிரிச்சு சம்மந்தம் செஞ்சுக்காட்டியும் சாதி சனமெல்லாம் ஒத்துமயத்தான் வழ்ந்திச்சு.

காரைக்குடி ஊருக்கே இவங்கதான் நாட்டாமக்கார மாதிரி அப்பெல்லாம் விதானையார் குடும்பமெண்டு சொல்லுவினம்.

அந்தக்காலத்தில சிவப்பியர் விதானக்கிட்ட உதவின்னு கேட்டுநின்னா வித நெல்ல கூட விசுக்கென்னு குடுத்துடுவாங்க. இந்தக் குடும்பத்துக்கு ஊரே கட்டுப்படுது.
பெரியப்பன் சித்தப்பன் அத்தை மாமன் மச்சினன் சொந்தக்கரனா இவங்க குடும்பத்துக்கு மட்டும் உடையார் வீதின்னு வீதியே வெச்சிருக்காங்க, இருந்தும் ஊரு கட்டுப்படுதென்டா இவங்க மனசுக்குத்தான்.

சொத்தெல்லாம் மொத்தமா கிடந்தாலும் பூட்டி வெச்ச பட்டுத்துணி மாதிரி பத்திரமா பத்திரம்மா கிடக்கோனும் வீட்டு அலுமாரிக்க. நாலு காசு கிடந்ததாலும் கட்டிற சீல மாதிரி வெளியில தெரியோனுமென்டா நாலு பேருக்கு குடுக்கோனும் செல்லத்தாயி மனசு மறைக்காம சொல்லுறது இதத்தான்


சிவப்பியர் நாட்டமா பண்ண ஊருக்க ஊருக்கெண்டு ஒத்துப்போன குடும்பங்க ஐநூறு இருக்கும். சிவப்பியர் குடும்பம் பதினாலு போக குருக்கள் பூசாரி பரிபாலகரெண்டு உருவத்தம்மன் கோயிலுக்கும் பிள்ளையார் கோயிலுக்கும் செலவில்லாம பன்னிரெண்டு குடும்பம். ஊருக்க மூட நம்பிக்கைக்கும் இவங்கதான் காரணம் ஊரிட அறிவான பக்திக்கும் இவங்கதான்.

காரைக்குடி மட்டுமில்ல நாட்டுக்கே சோறுபோடா வித விதைச்சு அருவசெய்ய அறுபதா வெள்ளாளர் குடும்பம். போகம் முடிஞ்சு போகம் வர காத்திருக்கிரதால இந்தக் குடும்பங்களுக்கு தனிப்பெரும

சலவ செய்ய நாலு வண்ணன் குடும்பமா, ஊரு பெரும சொல்ல பனமரத்து பயன் தேடி இடுப்பில ஒரு பை கட்டி கள்ள இறக்க பதினஞ்சு பள்ளன் பன்ந்தோப்ப சொந்தமாக்கி.

ஊருக்காரங்கள அழகாக்க மூணு சவரக்கரர் ஊரில ஒன்னு போன ஒப்பிக்க ஆறு பரயன்கள் குடும்பம் குடும்பமா வாழ்ந்து போக. மிச்சமிருந்த சனமெல்லாம் தொழிலுக்கேத்த சாதி பிரிச்சாக, வாழ்க்க மட்டும் நடத்துறாங்க எதோ ஒரு வட்டத்துக்க

இவக சாமிவிட்டு சாமிகும்பிடுவாங்க, ஊரு விட்டு ஊரு பிழைப்பாங்க. முறுக்கு மீசேல கிடக்கிற நர முடிய மறைக்காமல் போனாலும் போவாக சாதி விட்டு சாதி மட்டும் மால மாத்திக்க மாட்டங்க அப்பிடியொரு பெருந்த்ன்ம இந்த ஊர்க்காரன்களுக்கு. காதலிச்ச மட்டும் சாதி போகும்னா ஊரே வேட்டிகிடுவாங்க இந்த சாதியில்லா காதலுக்கு, காதலுக்கே சாதி போட்டு வேலி போட்ட பெரும இவங்களுக்குத்தான்.



“நம்ம சனத்தில ஒருத்தன் கூடவா ஊருக்கயில்ல”
வேட்டிப்பனைக்கும் ஒட்டாத காத்துக்கும் ஒப்பன போட்டுக்கேட்டான் மாறன், எவ்வளவு கேட்டும் ஒரு பதில் இல்ல ஒரு பயனில்லா.

செல்லத்தாயி சொல்லிறமாதிரி “மரங்களெல்லாம் பேசத்தொடங்கினா நாட்டில மழைக்கே பஞ்சமிருக்காது”

காதுக்க சொல்லாம மனசுக்கையே சொல்லிட்டு வெட்ட வெளியில இவனுக்கே விரிச்ச செம்ப்பாட்டு கம்பளத்தில தனியா நடந்து போறான் கலை மாறன்.




கல்வீடு மணவீடு குடிசைவீடு கூரவீடு தகரவேலி கிடுகுவேலி ஒலவேலி கல்மதில் கட்டுமதில் இருந்த அடையாளத்தில சின்னம் கூட மிச்சமில்ல. ஊரையே வண்டி கட்டி நாடுகடத்தீட்டாங்களோன்னு தனக்குள்ளேயே தலப்பா கட்டி நடக்கிறான் நாலுகிலோமீட்ட்ர்.

கண்டதெல்லாம் காணாமல் போனாலும் இந்த வெய்யில் மட்டும் உசிர வாங்குது. உச்சந்தலயில ஒளியிட வீச்சுப்பட்ட உள்ளயிருக்கிற நரம்பெல்லாம் சூடாக்கி உசிரக்கேக்குது. கொஞ்சமா சூட்டத்தனிப்பமென்டா ஒரு பயலில்லா ஊருக்க ஏது தண்ணி, வீச்ச மறைக்க நிழல் கேட்டா பட்டமரமெல்லாம் மொத்தமா காயிது. உடம்பிட சூட்ட உச்சந்தலயில எட்டிப்பார்த்த வேர்வய ஒத்தக் கையால வீசிப்போட்டு கரையத்தேடிரான் கானல் நீருக்கனின்டு.

உச்சி வந்த வேர்வைத்துளியும் நிட்க்கமாட்டேங்க, வீசிப்போன ஒத்தக்கையும் விடமாட்டேங்க. வேர்வைக்கும் விரல்களுக்கும் மகாபாரதம். போருக்குப்போன அருச்சுனன் போல சுத்தி முத்திப்பாக்கிறான் உறவுக்காரன, பகைவனாக்கூட ஒருத்தனில்ல.

கண்ணக்கட்டி மூச்சுமுட்டி நடைபாதேல இடம் தேட முழிச்சுப் பார்த்த பாதியில கிடக்கிது உருவத்தம்மன்.

முட்டின மூச்சு முழுசா போயிருச்சோ கட்டின கண்ணும் காணாமல் போயிருச்சோ நிக்கிறது ஊரிலயா இல்ல வெட்டியான் கூட வேளுத்துப்போன சுடலேலையா?, மகாபாரத போரில வெற்றியாச்சு வேர்வைத்துளிக்கு, வேர்த்துப்போச்சு கலைக்கு
தடுமாறின காலோட தடம்மாறாம போயி இடிஞ்சு போன கோயில் படியில இருக்கிறான் நடந்தது அறிஞ்சும்.




கூரையில்லாத கோயில், துப்பாக்கி சூடுபட்டே ஓட்டயாப்போன பாவப்பட்ட சுவர், ஓட்டரயடிக்காத அறையில கிடக்கிற மணிகள் சொல்லுது கர்ப்பக்கிரகமெண்டு, களவாடப்பட்ட கோயில் சிலக்கிடயில கண்ணகிசில மட்டும் சிலம்போட.
தூரமா தெரியுது வத்திப்போன கேணி துவண்டுபோய் கிடக்கிது கருவேலங்காடு கோயில் வீதீக்க, மிச்சமா கிடக்கிறது கோயில் கல்லும் வளஞ்சுபோன சூலகமும்தான்.


சுருட்டமுடிக்குள்ள கையவிட்டு ஏதோ தேடீட்டு காத்தில சாயிர கத்தரிச்செடி மாதிரி ஓட்ட விழுந்த சிவரில சாய்து தல, காத்தில சிரிக்குது கோயில் மணி.
"தொலஞ்சதயெல்லாம் எப்ப தரப்போரா உறுவத்தாம்மா, இதுக்கா இத்தன கஷ்டமும் பட்டோம்”
ன்னு காத்திலையே கத்தீட்டு தொலஞ்சதயெல்லாம் தேடப்பொரான் மாறன், தேடிரதயெல்லாம் தொலைக்குது சூரியன்


கல் மனச போனாலும் கள்ளமில்லாமல் பேசுவாலே தமிழ், விரச்சவனயெல்லாம் விலாசீட்டு மச்சான் மச்சான்னு தோழாத்தட்டுவான்களே சின்ராசு மயில்சாமி கோயிலன். படிச்ச மாஸ்டர் பரதேசி சாமியார், அம்மா மகமாயி அப்பா சிவப்பியர் அண்ணன் சுகுமாரன் இன்னும் எத்தினையோ முகங்க சொச்சத்தில வந்தது போக.

உருப்படியா நின்ன காக்காயொன்னு கரயாம சொல்லிச்சு இவங்க பிழப்ப,

பச்சயிலயில காக்கயோட பாசத்த துடச்சிட்டு கட்டின கண்ணுக்கு சொல்லிக்குடுக்கிறான் கொஞ்சம் கலஞ்சுபோக.



இன்னும் விழையாடுவோம்......

No comments:

Post a Comment