Friday, 29 May 2009

பனையோடு விளையாடி - அத்தியாயம்-03

[ நாட்டில நாளுக்கு நாலிடத்தில சண்ட தொடங்கினாலும் காரக்குடிமண்ணும் சுத்தியிருக்கிற சாதிசனமெல்லாம் நின்மதியாத்தன் கிடக்குது, இரும்புத்தொப்பிக்காரங்கள் ஊரக்காணும் வர உரிமை கேக்கிர சனமெல்லாம் உவத்திரவமில்லமா வாழுது இருபது வருசத்துக்கு முன்னால ]


"இதனால காரக்குடி மேட்டுக்குடி மாசியப்பிட்டி மண்மேடு மக்களுக்கு, பெரிய விதானையார் சிவப்பியர் சார்பாவும் கோயில் பரிபாலகசப சார்பாவும் தெரிவிச்சுக்கிறது என்னெண்ட நாள மறுநாள் உருவத்தம்மன் கோயில்ல கொடிய்ரப்போகுது ஊரு சனத்தயெல்லாம் சுத்தபத்தமா நடமடோன்னுமென்னும் சாதி சனம் பாக்காம ஒத்துமையா நிண்டு ஊருக்காகவும் உங்களுக்காகவும் கலந்துக்கொனுமேன்னும் கேட்டுக்கிரங்கோ...."


குழாய் கட்டின வண்டிக்குப்பின்னால ஒடுதுக அரக்கச்சட்டக, சிந்தின மூக்க பாவாடேல தேயக்கிது சிலது.

பத்துநாள் திருவிழாவையும் உபயகாரர்களையும் ஏத்தி நின்ன துண்டுப்பிரசுரத்தில ஊரையே பேசவச்சது
- "உருவத்தம்மன் கோயில் உர்ச்சவத்தற்கு முழுப்பாதுகாப்பு காரக்குடி பேரூர் அமைப்பு"


“நாலிடத்தில நடக்கிறதா பாத்திட்டு எங்கட பிள்ளைங்க ஆரம்பிச்சதுதான் இந்த அமைப்பு... இப்ப எல்லா ஊர்ப்பிள்ளங்க்களும் சேர்ந்து செய்யுதுகள் ஏதோ இதுகலாலவாவது விடிவுகாலம் பிறக்கட்டும்”
வெத்தில போட்ட மணியத்தார் கூடி நிண்ட கூட்டத்திட்ட சொல்ல, ஊருக்கு ஊர் நடக்கிற பிரச்சனயல நிப்பாட்ட நாங்களெல்லாம் ஒத்துமையா நிக்கொனுமேண்டு சந்தில சுருண்டு கிடந்த சனமெல்லாம் வெளியில வந்தது கூடுதுகள் ஊர்க்கதயோட


ஊரே கூடிக்கிடக்கயில கொட்டில்ல கிடக்கிற கன்னுக்குட்டி மட்டும் ஊரப்பாக்காம துள்ளிற மாதிரி நேத்துப் பெஞ்ச மழயில கையில கிடந்த பிரசுரமெல்லாம் நாலா மடிச்ச கப்பலாகிது. தண்ணிலபோர போற கப்பலோட கலையிட மனசும் சேர்ந்து போகயில தன்னில மறக்குது கலைக்கு.

“டேய் கல உதயிங்க கொண்டுவாடா, ஊரே செலவலிச்சு செய்யிரது உனக்கென்ன கப்பல் விடவே ...”

திண்ணயிலயிருந்த முருக்குமீச வெத்தில பெட்டீக்க கையவிட, வெட்ட கப்பலெலாம் தண்ணீல மூழ்கிப்போக, தன்னில திரும்ப கப்பல் செய்யாமலே தண்ணீல போகுது பிரசுரம்.

முறுக்கு மீசேல கோவம் சிவப்பியருக்கு சின்னக்காலில ஓட்டம் கலைக்கு.

ஓட்டம் பிடிச்ச காலுகலெல்லாம் ஒன்னச்சேருது தொடரிது ஆட்டம் கொலகொலய முந்திரிக்கா நரிய நரிய சுத்திவா.

-----------------------------------------------------------


கரச்சுவெச்ச சானியெல்லாம் அரிச்சுப்போன அடுப்பங்கரையில மெழுகாக்கீட்டு மங்கம்மா கைய்யக்களுவயில கூட்டம் சேருது வீட்டுத் திண்ணயில

“அடியே மங்கம்மா எழுதிவெச்ச கோயில் கணக்கையெல்லாம் உந்த சாமி படத்துக்குப்பின்னாடி வெச்சிருக்கன் அதக்கொஞ்சம் எடுத்திட்டு வா, அப்பிடியே இவங்களுக்கெல்லாம் தேத்தண்ணியப்போடு கோயில் வேலயில கலச்சுப்போய்ட்டுதுகல் மனுசங்க”

வாழவைக்கும் மண்ணும் தாகம் தீக்கும் தண்ணியும் இன்னும் ருசி மாறாமயிருக்கிறது எங்க மண்ணில்தான் சொல்லிற செல்லத்தாய்க்கு வாயில சக்கர

கணக்கு வழக்கெல்லாம் தேத்தண்ணிக்கோப்பயோட திண்னேலையே போக குசுனீக்கயிருந்த மங்கம்மா களைப்போட கத்தினா

“டேய் மாறன் கலயக்கூப்பிடுடா இருட்டிப்போச்சு “

கதையோட போராடின சுகுமாரனோட கனவக்கலச்சிட்டு வேகவெச்ச சுடுதண்ணிய ஊத்திறா மாவில இரவைக்கு சைய்யப்போற புட்டுக்கு, முந்திரிக்கா கூட்டத்த தேடிப்பொரன் மாறன்

“டேய் அண்ணா திருவிழான்னா இருட்டாதாட, ஒரே வெளிச்சமாயிருக்கிடா “
வெளிச்சத்தில கழண்ட காற்சட்டைய தூக்கிப்போட்ட கலைக்கும் அண்ணனுக்கும் வயசு வித்தியாசம் பத்து.

தலயில ரெண்டு போடு போட்டு வீட்டப்பாத்து கூட்டிவந்து பிடிக்கிற சண்டயில வீட்டில கிடந்த தலையணைக்கு வாயிருந்த ஊருக்கே சங்கு,

“அம்மா உவன அந்த சின்ராசு கூட்டத்தோட சேரவிடாதம்மா, அவனுங்க புத்திதான் உவனுக்கும் வருது, ஆக்களுக்கு முன்னால மட்டுமரியாதஇல்லாம டேய் என்றானம்மா “

கையில கிடந்த தலயான தூக்கி வீசல ,

“டேய் சுகுமாறன் வாட கோயிலுக்கு பந்தல் போடணுமாம், அப்பா ஊர் பெடியன்களையெல்லாம் கூட்டிப்போகச் சொன்னார்”
சின்ராசண்ண மொக்கராசு வீட்டுக்கு முன்னால,

“சரிடா மச்சான் அப்பிடியே உவனுங்க கண்ணனாக்களையும் கூப்பிடு நான் நேரா சந்திக்கு வாரன்”

சைக்கிள்ட சாவி கையில எடுக்கேக்க ஊருக்கு உபதேசம் உனக்கென்ன.


கோஸ்டி சேருது சந்தீல சைக்கிள் சத்தத்தோட மச்சான் சத்தம் கேக்கிது ராத்திர மரத்துக்கு


நேத்துப் பெஞ்ச மழையிட ஈரத்தோட உருவத்தம்மன் கோயில் வீதி நிறையுது இருட்டில குலைக்கிற நாயோட சேர்ந்த நரியோட சத்தத்தோட

மோர்ப்பந்தல் தண்ணீர்ப்பந்தல் சக்கரைப்பந்தளோட வலயக்கட பொம்மக்கட இனிப்புக்கட பூக்கட புடவக்கட தட்டுக்கட சேர சட்டிமுட்டி பூச்சாடி மஞ்ச்சாடி காத்தாடி கைப்பிள்ளன்னு வேண்டினதெல்லாம் வந்திறங்கி மைக்குப் போட்ட பந்த்தள்ளிளையிருந்து ஊருக்குள்ள போட்ட குழாய்க்கெல்லாம் இணப்பக்குடுத்து சுப்ரபாதம் போடயில கொட்டிள்ளயிருந்த மாடுக கண்ணா விழிக்குது, சைக்கிள்ள ஏறின மச்சான் கூட்டம் வீட்டப்பாத்துப்போகிது


ராத்திரீட பந்தல் களைப்பெல்லாம் பாயோட போக படுக்கதொடரிது கால பத்து மணிக்கும்


வரப்பு முடிஞ்சு வீடு வந்த சிவப்பியருக்கு வருது வேல

“ பத்து நாள் திருவிழாவுக்கு வேண்டிய நாடக நாட்டிய கூத்தாடிக் கோஸ்ட்டிக்கு நேரம் குறிக்கோனுமாம்னு பரிபாலக சப கேட்டிச்சு உங்க முடிவுக்கு தான் காத்திருக்காங்க கோயில் சபயில”
ஓட்டி வந்த சைக்கிள்ள நிண்டு கொண்டே சொன்னாரு செல்லயர்

“கோயில் பக்கமா போயி சபயிட்ட சொல்லு இன்னும் பத்தே நிமிசத்தில நிகழ்ச்சி பட்டியலோட வந்திடிறன் எண்டு”
ஊத்தி வெச்ச பழன்சோத்து தண்ணியில வரப்பு களைப்பா போக்கீட்டு உள்ளேயிருந்த நிகழ்ச்சி பட்டியலோட கிளம்பிறார் கோயிலப்பாத்து.

-----------------------------------------------------

கடசிய மிஞ்சிக் கிடந்த மீன் குழம்ப ஒண்ணுமில்லாம ஊத்திக் கழுவீட்டு மச்சச் சட்டியெல்லாம் மூலயில போக பூட்டி வெச்ச சைவச்சட்டியலுக்கு பத்து நாள் உழைப்பு ஒப்பந்த அடிப்படேல

“நாட்டு நிலமா நல்லாயிருந்த எங்கட சாதி சனத்தயெல்லாம் இந்த திருவிழா சாட்டோட கண்டிருக்கலாம், இந்த வருஷம் பிரச்சன பிரச்சன எண்டு சனமெல்லாம் ஊருக்கையே கிடக்குது, எப்ப தான் இதெல்லாம் மாறப்போகுதோ”

சட்டி முட்டியோட பேசின நிலம போய் சும்மா கிடந்த திண்ணயில ஒன்னா சேர்ந்திருக்காக ஊரு போம்பிளக

கதை புரளுது காதுக கேட்கிது தூரத்திலயிருந்த பசுமாடு கூட எழுந்து நின்று தலையாட்டுது

“அம்மா தேத்தண்ணி”

பாயில கிடந்த சுகுமாரன் சுகமாக் கேட்க

“பொருடா வாரன்”

ஊர்க்கதயில கிடந்த மங்கம்மாக்கு வீட்டுநினைப்பு கொஞ்சமாத்திரும்பிது.

--------------------------------------------------------------------

முதல்நாள் கொடியேத்தம் பின்நேரத்திலயிருந்து கச்சேரி ஆரம்பிக்குது.
மயிலாட்டம் ஓயிலாட்டம் பொம்மலாட்டமெல்லாம் முன்னாம் நாள் திருவிழாக்குப் பிறகுதான் கட்டளையா சிவப்பியார் சொல்ல

“அப்போ மூனுநாளைக்கும் நாதஸ்வரம் மேளம் மிருதங்கம் சங்கீதம் பரதம் என்னு கச்சேரியாவது போடுங்கப்பா கல கட்டட்டும்”.

பக்கத்திலயிருந்த பெரிய கருப்பு சிபாரிசு செய்ய பொங்கின சோறு பட்டினிப்பண்டத்துக்கு போனாலும் வடிச்சு கஞ்சியாச்சும் மிச்சமிருக்கு.
ஆக மொத்தத்தில ஊரே தூங்கப்போரதில்ல பத்து நாளைக்கும் நிகழ்ச்சிய நிரப்படுத்தி நேரமெல்லாம் போட்டுமுடிஞ்சும் நேரமாகல்ல இன்னும் மத்தியானச் சோத்துக்கு.

வந்த காரியம் முடிஞ்சு போக போட்டு வெச்ச பந்தலுக்குள்ள தொடருது உள்நாட்டு அரசியல்.

“மட்டுமுனயில தொடர்ந்தும் செல்லடியாக் கிடக்கிதாமப்பா சனங்கலெல்லாம் திக்குத்தெரியாம ஒடுதுகளாம். செத்துப்போன சனத்தமட்டும் உறவு பாக்காம விட்டிட்டு ஊரத்தேடிப் போகுது எங்க சாதிசனங்க காலையில பேப்பர் படிக்க ஈரக்கொலையே நடுங்குதப்பா”

சொன்ன குரலிலேயே தெரியுது நடுக்கம் செல்லையருக்கு,

எல்லாத்தையும் இந்த உருவத்தம்மன் தான் பாத்துக்கணும் உரிம தேடிற எங்கட சனத்துக்கு நாட்டப் பிரிச்சுக்குடுத்தா நின்மதியாப்போயிடும், இந்த சனியரசாங்கத்தால எப்பதான் விடிவு காலம் வரப்போகுதோ
( மனசுக்க தங்கச்சி ராசம்மாவ நினச்சு ஒரு சொட்டு கண்ணீர் கீழ வரயில கையொன்னு ஓடிப்போய் உண்மைய மறைக்குது ஊருக்கு )

உச்சி தொட்ட சூரியனோட எடுக்குது பசி கலயிது கூட்டம், குசினீக்க சமைச்சு வெச்ச கத்தரிக்கா குழம்பு பக்கத்து வீட்டு திண்ணைக்கு தொட்டுக்கொள்ள ஊறுகா

“குழம்ப கொஞ்சம் ஊத்து மங்கம்மா எத்தின நாளானாலும் இந்த கத்தரிக்க

குழம்பிட வாசம் மட்டும் உன்ட கைய பக்குவத்தில இருக்கிடி”
ஊத்தின குழம்பிட ருசி பாக்கயில, அடுப்பங்கரையில போட்ட பழைய துணி மாதிரி நாப்பது வயசிலயும் வந்த வெக்கம் வயசப்பாத்திட்டு மறஞ்சு போகுது

கருத்த மீசேல ஒட்டிக்கிடந்த ஒத்தசோத்த இழுத்து எடுக்கையில, கோவம் வந்த சூரியன் மறயபபாக்குது பூமீக்க

----------------------------------------------------------------------------------------------

குசுனிக்கு பின்பக்க வாசலோட இறக்கிக்கட்டி கூரவேஞ்சு சானி மொழுகி திண்ணகட்டி, வேள்ளான்மேல வெளயிரதோட வீட்டுக்கு வாங்கிரத்தையும் மூடிக்கட்டி மிச்சமிருக்கிற வெங்காயத்த கயித்தில தூக்கிக்கட்டி கொஞ்சமா கிடக்கிற இடத்துக்க கைவிட்டு வெச்ச உரலுக்கு வருது வேல

வறுத்து வெச்ச அரிசியும் வறுத்து வெச்ச பயறும் ஒருகைப்பிடி ஒருகைப்பிடின்னு அள்ளிப்போட்டு குத்தயில, திண்ணேலயிருந்த கல மாறிக்குதிக்கயில அரிசியும் பயறும் போடுது தாளம்

சூரியனோட கோவந்தனியமுதல் சுட்டு முடிக்கோனும் பூசைக்கு வேண்டின பலகாரம், சாயங்கால இருட்டோட போன சமஞ்சபொண்ண தேடிற மாதிரி முடிக்கிற வேலைக்கா முழுசா ஓடுது மங்கம்மா ஓட காலுக.

“அம்மா நான் ஒண்ட எடுக்கட்டே”

சுட்டு வெச்ச பலகாரத்த ருசி பாக்கப் போகயில சாமியோட சேர்ந்த சம்பிரதாயத்த உருவாக்கின மனுசங்களுக்கு குழந்தயோட மனசு புரியுமா என்ன

“அடேய் சாமிக்கு படைக்கிரதெட படைக்கமுதல் தொடக்கூடாது” ன்னு சுடுற பலகாரத்த அகப்பேல எடுக்கையில படல கொஞ்சம் போடுது சத்தம்

“அண்ணே சிவப்பி அண்ணே”
நடுங்கின குரலொண்டு கேக்குது படலேக்க

மத்தியானக் கதையில பேசினதெல்லாம் புத்தி சொல்லயில காலுக்கு போற ரத்தத்துக்கு போடுது அணை. திண்ணயில குத்தி வெச்ச கால நிலத்தத் தொடையில நிலங்க்கூட நடுங்குது,

கேக்கிர குரல் உது நெஞ்சோட ஊரிப்போனது பழகிப் பழகி கதுக கேட்ட குரல், படலயோட சத்தம் ராசம்மா குரலாச்சே


பனையோடு விழையாடுவோம்.......

No comments:

Post a Comment