
எழவு விழுந்த வீடும் ஓரவு முறிஞ்ச வீடும் ஒன்னென்னு சொல்லுவாக ஊருக்குள்ள, ரெண்டிதிளையும் கண்ணக்கசக்கீட்டு ஊரே கூடிநிக்கும், என்ன ஒன்னு எழவு வீடின்ன ஒரவ முரிச்சவக கூட கடசியப் போர, உசிரப் பிரிஞ்ச வெறும் ஒடம்புக்கு மரியதக்கென்னச்சும் வருவாக, ஓரவு முறிஞ்சா முறிஞ்ச ஓரவவோட சேந்தவாக கூட வாழுற உசிரிட மூஞ்சேல கூட முளிக்கமாட்டக,
விழுந்தது எழவு அதுலயும் ஊருப் பெரிசு சிவப்பியோட அக்கா புருஷன், என்ன தான் ஒரவ வெட்டி தள்ளி இருந்தாலும், புருசனைப் பிரிஞ்சு ஒத்தையில வந்து நிக்கிறா ராசம்மா, ஆறுதல் சொல்லவும் மனசத்தேத்தவும் ஒன்னுக்கு ரெண்டு சனம் வந்தாத்தானே தாயிக்கு மனசு ஆறுதலடையும், சேதி கேட்ட சனமெல்லாம் ஆளுக்கொரு நடபோட்டு சூரியனோட வந்துசேரயில தூங்காமக்கிடந்த ராசம்மா மூஞ்சயில ஈ கூட ஆடல.
காலைக்கு பட்டிநிப்பண்டம் நானெண்டு சொல்லிவெச்சு, அரிசிமா இடியப்பத்தோட ரெண்டு தேங்க புழிஞ்சு வெச்ச பால் சொதியாயும் கொண்டுவந்து உள்ளவெச்சிட்டு மங்கமாட்ட ஒரு வர்த்த சொல்லீட்டு ராசம்மக்கு ஆறுதல் சொல்லப்போகயில கூட நிண்ட கிழவிகள் கூட்டம் சேருது இந்திரி யோட சேர்ந்து ஒப்பாரிக்கு,
எழவு விழுந்த வீட்டுக்கு ஒப்பாரி வெக்கவெண்டே ஊருக்குள்ள கூட்டமிருக்கும், ஒன்னாக்கூடிநின்னு போன உசிரு பண்ணினதயெல்லாம் பாட்டப் படிப்பாக, கலியாண வீடெண்டா மஞ்சள் குங்குமத்தோட வரவேக்கிற சனம் ஏழவின்ன வெப்பாக ஒப்பாரி, வார சனம் வரையில நின்ன ஒப்பாரி மறுபடி தொடங்கிடும்
எதுக்கு வந்தாயிங்க ஏன் வந்தாயிங்க
மாமன் இருக்கானோன்னு பாத்தியோ
இல்ல அத்தயிட கோலம் பாத்தியோ
கண்ணால காணலயே கடசியில ஒன் முகத்த
ஆனாலும் நிக்கிறியே எண்ட நெஞ்சுக்குள்ள
கடசியில போகயில புகையில குடுத்தியே
பாடையில போவியின்னு சொல்லீட்டுப்போகலையே
வார சனத்தோட ஒப்பாரிவெக்கயில சொல்லியனுப்பின சனத்தோட சொல்லிக்காம வருது ஊரு.
"பாத்துக்க ஒடம்பு கூடயில்லயென்னு பாடையில போறவனுக டயரக் கொளுத்தி எரிச்சிடானுகலாம்"
உள்ள போயி ஆறுதல் சொல்லி வீட்டிட தாழ்வாரத்தில தல படாம வந்த செல்லக்கண்ணு சொல்லிக்கொண்டே வெளியவர, எழவு வீட்டில ஒப்பாரியையும் மிஞ்சுது சனங்கலிட பேச்சு.
"மட்டுமுனயில நடந்த கலவரத்தில ராசம்மா புருஷன் சுந்தரத்த நடுரோட்டில சுட்டு பிணம் கூட சட்ச்சியில்லமா ஏறிச்சுப்போட்டணுகள் படுபாவியல், உவ ராசம்மா புள்ளயல் ரெண்டையும் கூட்டிட்டு வந்திருக்க யின்க, என்னதான் செய்யப்போகுதோ ஒத்த மனுசியா, அதுவும் ரெண்டும் சமயப்போரதுகள்"
சிவப்பியரிட கவலையெல்லாம் ரசம்மவ பத்தினதுதான், திண்ணயில கிடந்திருந்து ஆறுதல் சொல்லவும் வழியில்லாம வாரவ போரவயளிட்ட உலரிக்கிடக்கிராறு.
எழவென்னு வந்தாலே போனவன விட்டிட்டு, இழந்த சனத்துக்கு நாலு ஆறுதல் வார்த்த சொல்லணும், உது தானே எங்க ஊரு வழக்கம். செல்லத்தாயி சொல்றதும் உதத்தான், வந்தமா கடமைக்கு போனமா என்டில்லமா, எழவுவீட்டில நிண்டு நாலு ஆறுதல் சொன்னாதானே இழந்த சனத்திட மனசாரும்.
வந்தவக எல்லாம் பேச்சுக்கில்லமா ராசம்மாக்கு சமாதானம் சொல்லிப்போரக, என்னதான் சொன்னாலும், லாடம் கட்டின மாட்டுக்கு பரிதிக்கொட்டையும் புண்ணாக்கும் அள்ளி அள்ளி வெச்சாலும் வலி என்னமோ மாட்டுக்குத் தானே.
வெளிச்சம் ஓடிப்போறேங்க நெலவு விடமாட்டேங்க, இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் போராட்டம் அந்த பௌர்ணமி சாயங்காலம், சனம் கொஞ்சம் கொரயாக்கிடக்கயில வருது சேதி கேட்ட வேம்படி சனங்க, முடிஞ்ச ஒப்பாரி மறுபடி தொடங்குது.
வேம்படிப்பவளக்கொடி சிவப்பியோட அம்மாவோட கூடப்பிறந்தவன கட்டிக்கிட்டவ, சிவப்பியருக்கும் ராசம்மக்கும் அத்த முறவேணும், இவக புள்ள அம்பலத்தார் அந்தக்காலத்திலயே வெளிநாடு போயி படிச்சவர், அவனுக்குத்தான் ராசம்மாவ குடுக்கிறதா பேச்சிருந்திச்சு, இடையில எல்லாம் மாறிப்போச்சு.
என்ன ஒரு பதினெட்டு வருசமிருக்கும், சிவப்பியோட அம்மா உசிரோடயிருந்த நேரம், தம்பியிட புள்ளக நாலிடத்தில போயி வம்சம் அடியோட அழியக்கூடதின்னு பவளக்கொடியோட கூடிப்பேசி சம்மந்தத்துக்கும் ஏற்ப்பாடு செஞ்சாங்க, பாவி மகள கேக்காம செஞ்சதுதான் தப்பா போயிருச்சு.
இந்த ஊரிலேயே எவளுக்குமேயில்லாத செவத்த தோல் ராசம்மாவுக்கு, அழகின்ன அழகு கொள்ளயழகு, அவ அழகப்பாக்கவென்னே குழந்தெல இருந்து கொமரன் வர வேலீக்க கேடப்பாக ஆனா இவ மட்டும் குனிஞ்ச தல நிமிர மாட்ட அப்பிடியொரு புள்ளைய எவன் தான் மனசக் கெடுத்தானோ
அப்பதான் ஆறு மாசத்துக்கு முன்னாடி விவசாயத்தில ஏதோ பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு, இந்த ஊரில விளயுரதுகல ஆராச்சி செஞ்சு அனுப்புரதுகெண்டு அரசாங்கம் அனுப்பிவேச்சுது சுந்தரத்த, கிடக்கிற பொரம்போக்கு நிலத்தில மண்ண சோதிச்சு பயிர வெக்கிரதில பயல அடிக்க ஒருத்தநில்ல எல்லேக்க அவ்வளவு கெட்டிக்காரன், இதனாலேயே ஊருக்க வந்த மூனே நாலேக்க இருக்கிற பெரிகிகளிட்டயெல்லாம் நல்லபெயரெடுத்திட்டான் சுந்தரம்.
ஆள் பாக்கிறதுக்கு கருப்பயிருந்தாலும் ஊருக்க எவனிடயுமில்லாத படிப்பும் ஒடம்பும் இவன்கிட்ட, சாயங்காலம் சைகிள்ல ஏறி ரெண்டு மிதிமிதிசு சந்துகல கடக்கயில ஊருப்பாட்டியெல்லாம் பாரதிராஜா ஹீரோண்டு கிண்டலடிக்க, வயசுப்பொண்னுகலேல்லாம் வாயப்பிளந்து பாப்பாக அப்பிடி ஒரு வசிய கண்ணு அவனுக்கு
நாள் போகிது சைக்கிள் கடக்கிது அடிக்கடி சிவப்பியர் வீட்டு படலையில மணிச்சத்தம், சைக்கிளோட சேர்ந்து கால் கொலுசு போடுது தாளம்.
பாத்துக்கிடதில பேசிக்கிட்டத்தில்ல இருந்தும் மனசுகிடந்து அடிச்சிக்கும் அந்த சாயங்கால ஆறரை மணிக்கு, சுந்தரத்தபத்தி ஊரு பேசுரதிலையும் ராசம்மா அழகப் பத்தி பெடியங்கள் கதக்கிரதிளையும் பூத்தது இந்த படலக்காதல்.
ஆறரை மணி கேக்கப்போகிது சைக்கிள் சத்தம் வரப்போகிது ,வழமயா முடக்கில சைககிள் திரும்பயில மணி தான அடிச்சுக்கும் வாறன் வாரனென்டு. அண்டைக்கு சத்தமில்ல மணியும் ஏழுக்கு பத்து குசுனிப்படியில குத்தவெச்சு உக்காந்தது தரயில கிடந்த தாவனிஎடுத்து நெத்திப்பூவ துடைச்சு மறுபடி மணியப்பாத்திட்டு கால் நடக்குது படலயப்பாத்து
ராசம்மா இதுவர அனுபவிச்சதில்ல இப்பிடியொரு தவிப்பா, அவனுக்கு நானேன் காத்திருக்கோனும் முகத்த வெட்டி எச்சி முழுங்கி தனக்குள்ளேயே கேட்டாவு, காத்திருக்கிற காதலீக்க இவ மட்டும் விதிவிலக்கா.
கொலுசுசத்தம் கேக்கயில படலயிட விழிம்போட வருது கை உள்ள, கையோட கிடக்குது காகித கடிதம், எதிர்பாத்த மணிச்சத்தம் கூடவேகேக்கிது.
மெல்ல கடிதம் விழ, வளையல் கை கடிதம் தாங்க, ஒட்டவிளுந்த வேலிக்க ஓரசிக்குது கண்ணுக மட்டும், தாவணி தெரியல வளையல் காணல கொலுசு பாக்கல முஞ்சி விளங்கல கண்ணு மட்டும் பேசுது ஓலையில கிடந்த விருசல் வழியா
கடிதத்த விரிச்சுப்படிச்சு சேதி அறிஞ்சு கால்கொலுசு சொல்லுது சம்மதம், சைக்கிள் மணி யடிக்குது மகிழ்ச்சியில
என் உசிர் ராசம்மாக்கு,
நான் சுந்தரம், என்னப்பத்தி நீ என்னவிட அதிகம் அறிஞ்சிருப்ப தெரிஞ்சிருப்ப, ஒன்ன நான் அடிக்கடி பாக்கிறன் பேசிறன் என் கனவில மட்டுமா, ஊரு பேசிரதிலயோ இல்ல பருவ மோகத்திலயோ உன்ன நான் காதலிக்கல, என் வருகைக்கு காத்திருந்து உன் கொலுசு அனுப்பிற தூதுக்கு நாளுக்கு நாள் உன் மௌனமும் காத்திருப்புமா உன்ன யென் இதயத்தில நெரந்தரமா இருக்கச்சென்சது.
காதல் கூடி உன்ன கைப்பிடிக்க காத்திருக்கி்றன், ஒருமுறை உன் தரிசனம் கிட்ட பிளாவடிப்பிளையார் கோயில்ல காத்திருப்பன் நாள சாயங்காலம்.
என்றும் உன்னினைவாய் வாழும்
சுந்தரம்
கால் கொலுசு போட்ட சத்தம் இந்த கடித்த்துக்குத்தான்,
சாமியக்கும்பிர்ரமாதிரி நாலு சுத்து சுத்தி மணி அடிச்சிட்டு சைக்கிள் கிளம்பிது
சம்மதம் கொலுசு சொல்லியும் ராத்திரியோட போராட்டம் ராசம்மாக்கு, தூங்காமா கிடக்கிறது விளக்கு மட்டுமில்ல ராசம்மகவும்தான்,
அவன எப்பிடிப்பாக்கிறது? பாக்கலாமா? பேசலாமா? பலகலாம? இது முடிய அவன் எப்பிடியிருப்பான்னு இல்லாத அவன்கூட வெக்கப்பட்டு பக்கத்தில கிடந்த வெளக்கிட்ட பேசீட்டு கண்னயரயில பக்கத்து வீட்டுகோழி பாட்டுப்பாடிக் கூவிச்சு.
காலையில இருந்து மணிக்கொருமுற மணிபாத்தும் நாளிகயாகல சாயங்காலத்துக்கு, நாளுமுற தாவணிமாத்தி முனுமுறை தலசீவி முப்பதுதரம் கண்ணாடி பாத்து ரெண்டுமுற பொட்டு வெச்சு கடசிய பூவ தலையில வெக்கயில சாயங்காலப் பூசைக்கு விநாயகர் துதி பாடிச்சு கோயில் ஒலிபெருக்கி.
அவசரமா பூசத்தட்டெடுத்து கிளம்பயில காலிலயிருந்து உச்சிவர தொடுது வெக்கம், கால் நடக்கல கை அசயல மனசு பேசல அவ மட்டும் போற வீதிய பாத்து. கோயில் சேருது, நெஞ்சு அடிக்கிது, தேடாம தேடுது கண்ணுக, கோயில் வீதி கடவீதி உள்வீதி கண்ணோட காலும் சுத்தி கர்ப்பக்கிரம்வந்து சாமி பூசசெஞ்சு கண்ணமூடி கன் விழிச்சுப்பாக்கயில நெத்திதிருநீரோட நிண்டான் சுந்தரம்.
ராசம்மா பாக்கல இவன்தான் சுந்தரமெண்டு அறிஞ்சத சொல்லிச்சு கொலுசோட சேர்ந்து கால் விரல் நுனி போட்ட கோலம். பேசல குனிஞ்ச தலயில ஒருஅசைவில்லமா கண்னிம அசஞ்சு குடுக்க கண்மட்டும் பாத்திச்சு சுந்தரத்த, விளக்கோட சொன்ன அழகுதான்,
நெத்தியில விழுற முடி, அளவான உடம்பு, கவர்ச்சியான மீசேக்க களவா ஒரு சிரிப்பு, ராசம்மவ வெச்ச கண்ணு வெட்டமலே பாத்துநின்னு காலம் பூர ரசிக்கிற அழக கண்ணுக்குள்ள கொஞ்சமா பதிய வெச்சிட்டு கிட்டப்போகயில.
வீசி நின்ன கையெடுத்து ஒருவிரல் மட்டும்நீட்டி இல்லாத நகத்த ஒரு கடிகடிச்சு முழுசா ஒரு பார்வ பாத்திட்டு சின்னதா ஒரு வெட்டு வெட்டி சிரிப்போட துள்ளி ஓடின ராசம்மா.
சொல்லுற காதல விட புரியிற காதலுக்குத்தான் உணர்வு அதிகமென்னு எங்கேயோ படிச்ச ஞாபகத்தில, புரிஞ்சுட்டு கும்பிட்டு சைக்கில் போகுது ராசம்மா வழி பாத்து.
"ராசம்மா கொஞ்சம் நில்லு" சுந்தரம் முனுங்க, மனசு நில்லேங்க கால் நிக்கமாட்டேங்க காலில வீச்சு கூடுது ராசம்மாக்கு.
மறுபடி மறுபடி ஒரே பேச்சு ஒரே மௌனம் ஒரே வேகம்
சைக்கிள்ட வேகம் கூட்டி முன்னால வந்து நிண்டு ராசம்மவப்பாத்து காதல் சொல்லயில கண்ணுரெண்டும் பேசுது கண்ணீரில
ஏய் ராசம்மா யென் அழுற, என்னப்பிடிக்கலையா?
பதில் இல்ல
சொல்லு பிள்ள என்னப்பிடிகலயா?
கண்ணீரோட மௌனம் மறுபடி
சரி நான் போகட்ட?
கொலுசு சொல்லுது பதில்
அத்தனைக்கும் ஒரே பதில் கொலுசில புரியுது சுந்தரத்துக்கு,
"நாளைக்கே வாறன் உன்ன பொண்ணு கேட்டு"
பதில சொல்லி சைக்கிள் திரும்பல கொலுசோட சேந்து வளையலும் சொல்லுது ராசம்மாட மனச.
ஊருக்க ஒருத்தநில்ல சொந்தமெண்டு தானே சீரெடுத்து தானே சிங்காரிச்சு தானே தனக்கு பொண்ணு கேக்கவேன்னு கிளம்பினான் சிவப்பியர் வீட்டப்பாத்து
ஊருக்க ஒருத்தநில்ல சொந்தமெண்டு தானே தட்டெடுத்து சீர் செஞ்சு, தன்னத்தானே அழகுசெஞ்சு, கோயில் பக்கம் போய் ஒரு கும்பிடு போட்டு சிவப்பியர் வீட்டப்பாத்து நடக்கிறான் தனக்குத் தானே பொண்ணு கேக்க.
நெஞ்சில பயமில்ல எதுக்கும் துணிஞ்சவன், சின்ன வயசில இருந்து வெளியூரில படிச்சதால எல்லாம் தனியவே செஞ்சுக்க பழகீட்டான் சுந்தரம், அதுக்காக பொண்ணு கேக்கவுமா?
வந்த சேதியரியாம வந்தவனுக்கு வரவேப்பு குடும்பம் சகிதம் வாசலில, உள்ள போயி உக்காரச்சொல்லி உபசாரம் செய்யயில, வீடே கூடி நிக்குது, அடுப்படீல நின்ன ராசம்மக்கு அர உசிரு போகுது,
திண்ணயில சிவப்பீட மாமா, உள்ள சிவப்பியும் சுந்தரமும், சிவப்பிட அம்மாவும் பவளக்கொடியும் வாசலில காலமடிச்சு சப்பனான்கொட்டி, பேச்ச தொடக்கிராக சிவப்பியோட அம்மா,
"என்ன தம்பி எதாச்சும் விசேசமா" பழத்தட்டோட வந்திருக்கீங்க மடிச்சு வெச்ச வேத்திலேல ஒருபாதி உனக்கென்னு பவளக்கொடிக்கு ஒரு கை நீட்டி மறுகை வாய்க்குள்ள போட்டு மேலயும் கீழயும் மென்னு அரக்கயில சிவப்பு எச்சி கொஞ்சம் எட்டிப்பாக்குது வாய் வழியா.
ஆமாங்க பட்டும் படாமலும் ஒரு பதில சொல்லீட்டு மரத்தில தொங்கிற கொவ்வக்க மாதிரி தலய தொங்கப்போட்டன்.
வந்தது என்னோமோ வீரமாத்தான், பேச்ச எங்க ஆரம்பிக்கிறது எப்பிடி தொடங்கிறது ஒண்ணுமே புரியல அறியல,
குசுனீக்கயிருந்த மங்கம்மாவ பவ்வியமா கூப்பிட்டு வந்தவனுக்கு குடிக்க எதாச்சும் கொண்டுவரச்சொல்லி மறுபடி குசுனீக்க அனுப்பீட்டு பேச்ச தொட்ர்ராறு சிவப்பி.
வந்த பேச்ச விட்டு ஊர்கத உறவுக்கத பேச வந்து சேருது மோர்,
திண்ணயில இருந்த மாமனாருக்கு பொறுக்கல
தம்பி வந்த விசயத்த பொசுக்கெனு சொல்லிடுப்பா பொறுக்கல,
மறுபடி கேக்க உள்ளயிருந்த கொலுசு சொல்லுது சம்மதம்
வார்த்த வருது கொஞ்சமா
"உங்க வீட்டு ராசம்மவ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, என்னப்பத்தி உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும், உங்களுக்கு சம்மதமான்னு தட்டு மாத்திக்கத்தான்..."
ஒரே மூச்சில சொல்லி முடிச்சிட்டு கடசி வார்த்தயில தடுமாற, கொதிச்சு போயி எழுற ராசம்மா அம்மா
"என்ன நெஞ்சளுத்தமிருந்தா எங்க வீட்டுப்பொண்ண கேட்டு வீட்டு வாசல் மிதிச்சிருப்ப, என்ன குலமேட நீ, மட்டுமுனக்காரனுக்கு பொண்ணு குடுக்கிற அளவுக்கு எங்க சாதி ஒன்னும் கோரஞ்சுபோயிலட.."
வார்த்த தடிக்குது, சத்தம் கேக்குது ஊர் எல்லேக்கையே, பேச்சு முத்திப்போயி சுந்தரத்த கை ஒங்கயில ஊர் தடுக்குது சிவப்பியே.
ஊரே சேந்து மட்டுமுனக்காரநெண்டு அவமானப்படுத்தியும், ஒத்த வார்த்த சொல்லல ராசம்மா பத்தி,
தைரியமில்லாத கொழாயடி நீ மனசாட்சி உறுத்துது, எத்தன அவமானம் அதனையும் உனக்கா தாங்கிக்கொண்டு ஊர விட்டு போறானே, முழுசா வந்திட்டான் மனசுக்க அழுத அழுத கண்நீரோட
நடந்தது தெரிஞ்சுக்காம, சுந்தரத்த ஊரவிட்டே துரத்தீட்டு அம்பலத்த பேசி முடிச்சாங்க அடுத்த நாளே,
மனசில ஒருத்தன நினச்சிட்டு இன்னொருத்தனுக்கு கழுத்த நீட்டுற ஈனப்பொலப்பு பொளக்கிற பொண்ணில்ல நானென்னு, சுந்தரத்திட விலாசத்த தேடிப்பிடிச்சு கடுதாசி போட்டு கலியாணத்துக்கு முதல் நாள் போயிட்ட அவன்கூடவே.
ஊரே பாத்து நிக்க தலகுனிஞ்ச சிவப்பி குடும்பத்த வாய்க்கு வந்தபடி திட்டு போனவ தான் இப்பதான் மிதிச்சிருக்கா இந்த வாசப்படிய.
என்னயிருந்தாலும் போனவ இப்பிடி ஒத்தையில வந்திருக்காலேன்னு பவளக்கொடி வர்த்தக்கெண்டில்லமா நெஞ்சார சொல்லுற நிம்மதி ராசம்மவ அணைச்சு.
என் மவன கட்டியிருந்த வெளிநாடென்டு சுத்தியிருப்ப, இப்ப ஒத்தைக்கு இல்லாம அழுவுற ன்னு மனசுக்குள்ளயே சோகத்த பாடிட்டு ஒன்னு ரெண்டு வார்த்த சொல்லயில, வந்த அழுக இன்னும் கூடுது ராசம்மக்கு.
மன்னிச்சிடு அத்தேன்னு மனசோட சொல்லீட்டு கட்டி அழுற பவளக்கொடிய.
என்னதான் வெட்டிக்கிட்டாலும் அருத்துக்கிட்டாலும் இந்தக் காதலெல்லாம் வெறுமையா வாழிராதுக்குத்தான், கிடக்கிற அன்பயெல்லாம் அத்திட்டு காதலிக்கிறதில எனக்கு உடன்பாடில்ல சொல்லுற செல்லத்தாய்க்கு காதலே வந்ததில்ல
ஊரப்பாக்கவும் ஓரவப்பாக்கவும் வெக்கப்படல கொஞ்சமமும், நெனச்சவனத்தானே கட்டிக்கிட்டேன், சாமிக்கும் சனத்துக்கும் தெரியுமிது, காதலிச்சவன மனசில நெனச்சிட்டு இன்னொருத்தன் கூட வாழ்க்க நடத்த நானென்ன அவுசாரிய, ஊருக்கு பதில் இப்படித்தான் சொன்ன.
சொன்னதில அர்த்தமுமிருக்கு, சுந்தரம் மேல அவ வெச்ச அன்புமிருக்கு.
வந்த சனம் சேர்ந்த சனம் எல்லாம் துக்கம் சொல்லிப்போகயில, உருவத்தம்மன் கோயில்ல இருந்து வருது சேதி.
அடி பட்ட மாட்ட அர ஏக்கர் உழ வெச்ச மாதிரி, சோகத்தில கிடக்கிற சனத்துக்கு நெஞ்சில விழுது இடி,
மட்டுமுனயில நடக்கிற சண்டைக்கு ஆள் வேணுமெண்டு உருவத்தம்மன் கோயில்ல நிண்ட மாணவர் அமப்பு பிள்ளங்க எல்லாம் போய்டுதுகள் சண்டைக்கு, போனவங்களோட உங்க சுகுமாரனும் போய்ட்டான்.
ஏற்க்கனவே ஒரு உசிர குடுத்திட்டு விருசலா நிக்கிற குடும்பத்தில ஓட்டைய போடுறாரு சேதி சொன்ன பொன்னயர்.
ஐயோ ஏன்டா ராசா, ஒரு காயம் பட்டாலே தாங்க மாட்டனே அவனா சண்டைக்கு போய்டான் ன்னு தலயில அடிச்சு அழுவயில, ஊரிட ஒவ்வொரு தெருவிலயும் கேக்கிது இந்த அழுகச்சத்தம்.
வானத்தோட போன பருந்தொன்னு தூக்குது கொழிக்குஞ்ச
இன்னும் விளையாடுவோம்.............