Thursday, 9 July 2009

வானொலியில் மறுபக்கம் வீணாய்போகும் திறமைகளாய்......

வானலைகளில் ஒரு தடவையேனும் தங்கள் குரலை ஒலிக்கச்செய்ய, திறமைகளை கையில் வைத்து நீண்ட கால போராட்டத்தோடு, பல அறிவிப்பு பயிர்சிக்கலூரிகளில் காலத்தோடு பணத்தையும், கனவுகளோடு வாழ்கையையும் விரயமாக்கும் என் அன்பு சகாக்களுக்கு, சில கசப்பான உண்மைகளோடு ஒரு கடிதம்





வணக்கம் தோழரே

ஆரம்ப கால தனியார் வானொலிகளின் தீவிர ரசிகன் நான், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, அவற்றின் தரம், இளவயதில் ஆர்வம் ஆற்றல் மிக்க அறிவிப்பாளர்கள் என தனியார் வானொலிகளின் வருகை இலங்கையின் வானலைகளை மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல ஊடகங்களையும் திரும்பிப்பார்க்கச்செய்த காலமது. சூரியன் சக்தி ஒருவருக்கொருவர் சலைத்தவரல்லர் என நிகழ்சிகளை பரிமாறிக்கொண்ட காலம்.

வானொலி வரலாற்றில் புதிய சாதனை என இவ்விரண்டு வானொலிகளின் வருகையை பெருமையோடு சொல்லலாம். மிக முக்கியமாக நிகழ்ச்சி வழங்கும் அறிவிப்பாளர்களின் திறமையும் நிகழ்ச்சி கொண்டிருக்கும் பொருளும், அதுவரை காலமும் இலங்கை வானலை கண்டிராத புதுமைகளை காணச்செய்தது என்று குறிப்பிட்டால் பொருத்தமானது.

அதுவரை காலமும் வெறுமனவே பாடல்கள், ஏதோ ஒண்டிரண்டு விவாதம், இது போக சிறுவர் நிகழ்ச்சி, ஒரு சில அரசியல் கலந்துரையாடல், இல்லையென்றால் மங்கையர் நிகழ்ச்சி என நேயர்கள் தொடமுடியாத தர எல்லையோடு நிகழ்ச்சிகள் வழங்குவோமென இளைய தலைமுறை அறிவிப்பையும் திறமையையும் குறுகிய வட்டத்துக்குள் நிறுத்திய ஒரு சில வானலைகளுக்கு எங்கள் நட்பு அறிவிப்பாளர்கள் கொடுத்தது சரியான அடி.

ஒரு நிகழ்ச்சியில் நேயர்களின் பங்களிப்பு எவ்வளவு, எதன் அடிப்படையில் நேயர்கள் நிகழ்ச்சிகளோடு ஒன்றிணைவார்கள், சக நண்பர்களோடு பேசுவது போல நேயர்களோடு பேசும் வழக்கம் வானொலிகளில் நுழைய இப்படியும் நிகழ்ச்சிகளை தொகுக்கலாம் என அறிந்து கொண்டது பல வானலைகள்.


இத்தனை பல சாதனைகளோடு களமிறங்கிய இலங்கையின் தனியார் வானொலிகள் காலப்போக்கில் அரசியல் பொருளாதார வியாபார கணக்கோடு தரம் மாறியதும், பல அறிப்பளர்களின் திறமைகளிலும் ஊடக சுதந்திரங்களிலும் முகாமைத்துவம் தலையிட்டதும், ஒருசில திறமையான அறிப்பாளர்களை இலங்கை தமிழ் வானொலிகள் இழக்க காரணமாய் அமைந்தன மிக வருந்தத்தக்க விடயமாகியது.

இதேபோல் மிக திறமையோடு அறிவிப்புத் துறைக்கு வந்த பல இளம் அறிவிப்பாளர்கள், ஊடகங்களின் சுதந்திரங்கள் தங்கள் திறமைகளுக்கு தடையானவை என்றும், வானொலிகள் வெறுமனவே பிரபல்யங்களுக்கு மட்டுமே, இன்றைய சூழலில் தங்கள் பொருளாதார நிலைமைகளை மாற்றி அமைக்க அறிவிப்புத்துரையை ஒரு ஊதிய தொழிலாக கொள்ளமுடியதெனவும் உணர்ந்தவிடத்து, பல சிறந்த அறிவிப்பாளர்களை தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை வானொலிகளுக்கு ஏற்ப்பட்டது என்பது உண்மையின் கசப்புக்கள், இருந்தும் இந்த விடயங்களில் எந்தளவு உண்மை இருக்கின்றதென்பது இன்னமும் வானொலி முகாமைதுவமிடமிருக்கும் சிதம்பர ரகசியங்கள்.

இன்றும் வானலைகளில் தங்கள் குரலை ஒரு அறிவிப்பாளராக ஒலிக்கச் செய்ய காத்திருக்கும் என் அன்பிலும் மேலான தோழர்களுக்கு வானொலி என்பது உங்கள் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு ஊடகம் நீங்கள் நேயர்களாய் இருக்கும் வரை, அதுவே உங்களை வானொலி அறிவிப்பாலனாக்கின் நீங்கள் அத்தனை கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்ட ஒரு தொழிலாளி மட்டுமே. உங்கள் திறமைகளுக்கு களம் எதுவென கண்டறியவேண்டியவர்கள் நீங்களே.

தோழமையுடன்
ரஜீவன்

No comments:

Post a Comment