Friday, 21 August 2009

உணர்வுகள் பேசும் புத்தகம்

தொலைபேசி சிணுங்கள் அவசர காதல்... புகையிரத நிலையம் காதலன் தொலைபேசி கண்ணிய அழைப்பு, செல்ல கோபத்தோடு வார்த்தைகள் உச்சரிக்க உன் ஜாபகத்தில் உறைந்த அந்த நிமிடத்தில் பேனா எழுதிய அவசர கற்பனை இது




உணர்வுகள் பேசும் புத்தகம்

அந்த வெட்கம்
ஒரு தரம் முகம் பார்க்கும் முன்
தொலைபேசி சிணுங்களில்
சத்தங்கள் பரிமாறலில்
மௌனங்கள் மட்டும் பேசும்
உச்சரிப்பின் வெட்க்கம்

முதல் ஹாய்
பெயர் சொல்லி மறுநிமிஷம்
ஒருநொடி நிசப்தத்தில்
குரல் கூட வாசிக்கும்
ஹார்மோனியம்

இலக்கணப் பிழையின்றி
அடுத்த வார்த்தை தேடும் அரை நொடி

எத்தனை வார்த்தைகள்
தாய்மொழியில் தேடியும்
நலம் விசாரிக்க
இலக்கியம் வழங்கும் அடுத்த வார்த்தை

ஒருவழியாய் மௌனம் கலையும்
முத்தம் கேட்க்காத உதடுகள்
முகம் பார்க்க அழைக்கும்
கனவு காணாத கண்கள்
கவி பாட தேடும்

கண்ணீர் பேசும் வார்த்தைகளோடு

நினைவோடு நினைந்தவளில்
நிலையான வார்த்தைகள்
நிதம் ஒலிக்கும் மென்று
காதுகள் சேமிக்கும் ஒவ்வொரு
உளறல்களின் உச்சரிப்புக்களையும்

செல்லக்கோபம் சின்ன சமாதனம்
ஒற்றையாய் உதட்டுக்கடி
ஓராயிரம் கண் சிமிட்டல்
ஒரு வரிக்கவிதை
மெல்லிய புன்னகை
இத்தனையும் தாண்டி

உன் ஒவ்வொரு திட்டிலும்
எனக்கான அக்கறை

நேரம் தடுமாறும்
தொலைபேசி சுடும்
கால்கள் வழிப்போக்கனாகும்
கைகள் இடம்மாற்றும்
சுற்றம் தொழையும் சூழால் மறக்கும்
நீ நான் பேச்சு மட்டுமாய்

பேச்சுக்களோடு
அருகிலிருக்கும் உன் புகைப்படம்
உதடுகள் அசைக்கும்
முரண்பாடுகளின்றி கண்சிமிட்டும்
புன்னகை செய்யும்

புகைப்படம் காதல் செய்து கவியும் சொல்லும்

வார்த்தைகள் தேடி தேடி
அகாரதிப்புத்தகங்கள் மூடப்படும்போது
உன் உதடுகள் உச்சரிக்கும் அந்தவார்த்தை
“உன்ன மறுபடியும் பாக்கணும்”

ஒரு சொல்லில் தற்கொலை செய்ததுண்டா
ஒற்றை வார்த்தை தூக்கில் இட்டதுண்ட
குரல் ஒன்று இதயம் கிழித்ததுண்ட
எங்கேயாவது
மொழி உயிர் கொள்ளுமா

வலி உணர்ந்திருக்கிறேன்
அந்த ஒரு சொல்லில்
அத்தனை வலியும் உணர்கிறேன்

தொலைபேசி துண்டிப்போடு.....

Tuesday, 11 August 2009

கட்டிலில் கலையொன்று




தொட்டிலில் கிடந்த பிண்டமொன்று
கட்டிலில் கதறுது கைக்காசுக்கு

என் பூஜை அறை கலைத்தேவதை
பிண்டமென்றேன் உன்னை

உடல் மட்டுமே விலை போகிறது
ஆன்மா தூய்மைபடுகிறது
புறக்கண் கொண்டு
உடல் தீண்டப்போவதில்லை
உன் அகம் தீண்டி
புறம் தள்ளி புனிதம் காணவே
பிண்டமென்றேன் உன்னை

அந்தப்பிரசவம்
வாடகைமுக தரிசிப்பில்
கலைமகள் என்ற உலகம்
இந்தப்பிரசவத்தில்
மெய்யுடல் காணாது
விலைமகள் என்கிறது

மஞ்சள் நீராட்டில் நனை உடல்
பூப்பெய்தி தொட்ட நாணம்
சடங்குகளில் வளர்த்த கட்டுப்பாடு
அத்தனையும் விலைபோகிறது
அந்த முதல் சந்தையில்
இருந்தும் உன் கற்பு மட்டும்
போலிப்புன்னகையில் புதுமையடைகிறது

தினம் தினம் எச்சில்கள்
தேநீர் கோப்பைகள் எழுதுகிறது
உடையும் வரை தேயப்போவது
உவமைகள் அற்ற உடல்களே
உன் உடலுக்கு உவமை தரப்போவதில்லை
உனக்கென்ற நாமம் உடலுக்கில்லை
நீ துய்மையானவள் புனிதப்பட்டவள்

எரிகின்ற மேடையில் தூக்கிப்போட்டும்
தீயில் தினம் வதைத்தெடுத்தும்
சாம்பலாகும் முடிவுமட்டும் உனக்கில்லாமல்
விலைபேசி எரிகிறது உன்னுடல்
மரணித்தும் வாழவைத்து
இறந்தும் உயிர்த்து
இறை விஞ்சி உயிர் சுமக்கிறது உன் உடல்

வருகிறார்கள் ரிஷிகள்
பிரம்மரிஷி ஆசைகளோடு?
முன்னே வருவது முற்றும் துறந்தவர்
கையில் எதற்கு வெண்கலப் பாத்திரம்
பின்னோடு யார் கவிஞனா?
கனவுகளோடு வாழ்பவன் நீ தானோ?

கட்டிலோடு ஆசை காமனோடு கரைகிறதே
ஆசையழித்த நீ பிரம்மரிஷி
கற்பும் ஆன்மாவும் உனக்கென கொண்டு
முற்றும் துறந்த நீ முனி
மெய்யழித்து நிஜம் புதைத்து
கனவோடு வாழ்வதால் நீ கவிஞன்

காணவில்லை மறையவில்லை
இருட்டோடு நிர்வாணம்
கருப்பில் தன்மானம்
கட்டிலில் கிடப்பது தவம்
இறந்த உடலை நுகர்கிறது
ஆயிரம் புழுக்கள்
கட்டியணைப்பது உயர்தினையல்ல
நித்தம் அறுவடைசெய்த அஃறிணை

இதயம் மட்டும் அழுகிறதே
உன் ஒவ்வொரு புன்னகையிலும்

நீ போதனைகளுக்காக பிறந்தவள்
புத்தன் வழியில் புனிதம் பெற்றவள்
ஜேசுவோடு பாவம் சுமப்பவள்
பிற மகிழ்ச்சியில் உயிரிழந்தவள்
இறைவனுக்கு ஏது இதயம்?

வார்த்தைகள் சுடும் உன்னை
வாழ்க்கை உனக்கேது

நீ வாழும்போதே ஆன்மாவனவள்
வளரும்போது உடல் கொன்றவள்
தொடுதலில் உன்னை அழித்தவள்
தீண்டலில் தற்கொலை செய்தவள்

வாடகை உடல் உனக்கெதற்கு
சரீர கடன் உலகிலேயே தீர்த்தவள்

நீ நீயாகிறாய்
தினம் கொட்டிவிட்ட உன் உணர்வழித்து
நாளோடு உடல் தின்று
பிரபஞ்சம் அடங்காத பிரபஞ்சம்
உனக்குள் வைத்து
மனிதம் மரணித்து.....

Sunday, 9 August 2009

நேர இயந்திரம்

(கல்லோடு கல் உரசி தீயை கண்டுபிடிக்க மனிதனுக்கு முன்னால் ஒரு பறவையோ மிருகமோ வெற்றி கண்டிருந்தால்... கொஞ்சம் தண்ணியில ஏதோ கிறுக்கினது...)

நேர இயந்திரம்




கொட்டிலில் ஒன்று
தொட்டிலில் ஒன்று
நிர்வாண வெட்கம்
நிலையறியா புத்தி
பெரியவன் எவனோ
பெறாமகனுக்கு பசிதீர்ப்பவன்

பக்கத்து வீட்டில் பேரம்பேச்சு
ஐந்நூறு ரூபாய்க்கு குட்டி
இரண்டாயிரத்துக்கு தாய்
நூறுக்கு பத்துக் குறைச்சல்
நாணயம் நாகரீகம்
மாட்டுக்கும் ஆட்டுக்கும்
முடியுது வியாபாரம்..

தாய்க்கெண்டு சமயல்கட்டு
குட்டிக்கெண்டு ஊர்க்கோயில்
அம்மா அம்மா சத்தம்
அடுத்த நொடி தாய் மடி
எஜமானி விஸ்வாசம்
சொல்லுது ஆடு...

மாளிக மாட்டுக்கொட்டில்
பக்கத்தில குடிச பண்ண
பன்னிக்கும் மாட்டுக்கும்
தகராறு வேலயில
சட்டத்தில முடிவில்ல எண்டு
சமத்துவம் சொல்லுது மாடு...

ஜனநாயக கரடி பாசிச புலி
இனத்துகில்ல ஆட்சி ...
பணத்திலில்லா உலகச்சந்த
பாராளுமன்றம் பயனுமில்ல
காதல் செய்யுது கிளியும் பருந்தும்
சேர்த்து வைக்குது கொக்கும் மீனும்....

காகம் கும்பிடப்போவதில்லை
கிளி சாலம் செய்வதில்லை
புறா விரதம் பிடிப்பதில்லை
பூச்சி ஞானஸ்தானம் பெறுவதில்லை
இருந்தும் பிறப்பும் இறப்பும்
வேதாந்தம் என்று எலி வேதம் படிப்பதுமில்லை

நாய்க்கெண்டு தாசி வீடு தெரியாது
பூனைக்கு ஏது வப்பாட்டி
கொலைகார மான் கிடையாது
எங்கேயாவது வெட்டுக்கிளி
பொய் சாட்சி சொல்லுமா
சட்டம் தெரியாது சாரைப்பம்புக்கு...

கோழி புரட்ச்சி அறியாது
வரலாறு சொல்லுமா
மாட்டுக்கொட்டில் புரட்ச்சியையும்
நத்தைகூட்டு புரட்ச்சியையும்
புரட்ச்சிகளில் அரசியல் முறையுருவாக்க
சிங்கங்கள் ஒன்றும் புரட்ச்சியாளர் அல்ல

சாஸ்திரங்கள் வரலாறுகள்
ரத்தங்காணும் அருவாக்கள்
புரட்ச்சிகள் யுத்தங்கள்
புதுமை சொல்லும் புத்தகங்கள்
அறிவியலாளர் அகம் பார்ப்பதில்லை
மதவியல் புறம் காண்பதில்லை

வறுமை வாழாவெட்டி
மிருகங்களுக்கில்லை
எரிச்சல் பொறாமை
பறவைகள் உணர்வதில்லை
உதவும் இனமென்று
தத்துவமும் பேசுவதில்லை

கொண்டது பகுத்தறிவு
செய்தது சிந்தனை
பிறந்தது உணர்வு
நினைத்தது உயர்ச்சி
மீண்டும் காட்டில்
கல்லோடு கல் உரசி......

Saturday, 8 August 2009

அமுதமான காத்திருப்பு

கால இடைவெளியில்
மழை நீர் சிந்தி கரையாத வானம்
கண்ணீர் ஏந்தி அழியாத பூமி
கரை படாத காதல்
பூப்பெய்தியும் காய்க்க மறுத்த கனி
கலங்கப்படாத பருவம்
இத்தனயும் தாண்டி

பல ஆண்டுகள்
பெயர் சொல்லி ஆளாகி
முற்றத்தில் முத்தம் பார்த்து
முழுநிலவில் முகம் தேடி
காத்தோடி கடிதம் வரைந்து
கனவோடு சோகம் வளர்த்து

கன்னியெனும் தன்மையது
காலத்தோடு கரைந்திடினும்

உள்ளமது உனக்கென்று
உறவுக்காய் காத்திருந்த
உத்தமிக்கு உவகை செய்ய


வருவான் காதல் கவிஞ்ஞன் இவனென
காலமொடு காத்திருந்த என் கன்னிக்கு

நெஞ்சோடு கவி தெளித்து
நேசத்தோடு மடல் அனுப்பி
பின்னோடு வருவது நாயகனன்றி
நாணம் கலைக்கும் காதலனென்று
முகநூலோடு முகம் பத்திதும்
முழுதும் அறியா பாவையாய்...

காலம் கடந்த முன் நினைவுகள்
கவிதன்னில் சொல்லிடினும்
அறைதன்னில் தனிமைதேடி
மாலைசூடும் நினைவுகள்
கனவுகள் தானென
கண்ணீர் கடன் வாங்குவதேனடி

மனசோடு நினைவு வந்து
மார்போடு கட்டியனச்சு
வரப்போட போனதென்று ...

வீதியோட நடந்து
விரல் நுனி பிடிச்சு
ஊருக்குள்ள பேசி
முடிஞ்சுவெச்ச நேசம்
மஞ்சள் தாலி குங்குமமத்தில்
கடைவது நனவன்று
நெஞ்சோடு சேர்ப்பதேனடி...

காதல் வந்தும் வார்த்தை யின்றி நீ
வார்த்தை தேர்ந்தும் சந்தர்ப்பமின்றி நான்




காலம் வரைந்தும் கவி சொல்லியும்
பாஷைகள் மௌனிக்கும்
இதயம் உச்சரிக்கும்

முற்றும் தீரும் வார்த்தை
முழுதாய் வற்றும் முன்
சற்றும் தாமதம் தள்ளி
உன் விழியருகில்

கனவென்று ஒருதரம்
கைநுனி கிள்ளி
காதலில் பல தரம்
கால்நுனி கீறி
வெட்கத்தில் இருதரம்
நாநுனி கடித்து

மண்பார்த்து தலை தூக்கி
முகம் பார்த்து நாணம் கொள்ளில்
கை நகம் கடித்து


அமுதமான உன் காத்திருப்பு
அழகாய் சொல்லியது
இருவிழி நதியோடி
என் கால் தனை தொட்ட
உன் கண்கள் எடுத்த ஊற்று

கட்டியனத்த தழுவலில்
கரைந்தது காதல்
மறைந்தது நினைவு

காலை தலயணை ஈரமாய்

அமுதமான காத்திரிப்பு தொடர்கிறது
என்றும் உலராத உன் தலையனையோடு

ஜீவனாய் என் கவி தொடர்கிறது
ஜன்னலில் ஒழிந்திருக்கும் உன் முகம்தேடி...

தலையணையோடாவது பேசுகிறது உன் கண்ணீர்
மௌனித்திருக்கும் நான் உன் மடி சாயும்வரை மட்டுமே...

Friday, 7 August 2009

ஆன்ம கலவி முத்தம்




அந்த ஒரு முத்தம்
அமிர்தம் இடை வெளி
மௌனம் முழு மொழி
அர்த்தம் நால்வையில்
நாணம் உயிர்வரை

அந்த ஒரு சேர்தல்
செவ்விதழ் இணைதலில்
இவ்மொழி உணர்தலில்
தேன் கல தேவமிர்தம்
வாய் வழி தொடுதலில்

அந்த ஒரு சிலிர்ப்பு
மெல்லின மேனியில்
சில்லென இலக்கணத்தில்
வல்லின தீண்டல்
ஆன்மா வரை ஃ ம்

அந்த ஒரு மோகம்
ஆதியந்த சலனமத்தில்
உணர்வின் கானம்
நாடியின் தீ
உயிரத்தலில் மரணம்

அந்த ஒரு வெட்கம்
ஆடைவரை தட்பமத்தில்
நான் மறை வேதமும்
ஐம்புல ஓசையும்
கற்ப்பிக்கும் பிரம்மம்

அந்த ஒரு நொடி
இரு ஜீவா பிரளயத்தில்
தலைவன் மடி சாய்தலில்
தலைவி குழல் கலைதலில்
பிறப்பிக்கும் ஜென்மம்

அந்த ஒரு ஆசை
விடைபெற்ற வெட்கத்தில்
தேவ கலச உண்ணலில்
உதடுகள் ததும்பலில்
இதயம் முவ்வுலகில்

அந்த ஒரு பரிமாறல்
சொர்க்கம் வழங்கும் மழையதில்
உச்சி தொட்ட வியர்வையது
உடல் வரை துளிர்ப்பதில்
ஆயிரசூரியன் உதிர எரிக்கை

அந்த ஒரு தருணம்
உடல் முழுதில் தகணித்து
ஏன் என்ற இதய கேள்வியில்
எது என்ற கல மோதலில்
எவை என்ற நாள அழிதலில்
ஆன்மாக்கள் இரண்டும்

நாம நாண ஐம்புல ஐஸ்வர்யா
காம கலச கன்னிக வாத்ஸ்யாயன
மன ஆன்ம ஆத்மசம்யுக்த சொர்க்கம்

நமக நமக உயிர் உருகும் உன் உடல்தனில்
மெய் உருகி பிரம்மம் இணையும் எம்
தேக ஸ்ப்ரிஸமதில் நமக நமக