
காமம் இல் காதல் பேரு
கருவது கொடை
வலியின்றி புறம் தள்ளின்
சுகப்பிரசவமது கொடை
புவி யுணர் புலன் கொள்ளின்
உடலது கொடை
அனை புலன் இயக்கின்
உணர்வது கொடை
தாய் தந்தை உடன்பிறப்பு
இல்லத்தில் கொடை
தோழி தோழன் பகை
புறத்தோடு கொடை
தாய்பாலில் பாசமது
வளர்வது கொடை
தந்தையின் அணைப்பது
தைரியக் கொடை
இளமையில் கல்வி
அறிவியல் கொடை
பருவத்தில் காதல்
ஆனந்த கொடை
காதலில் மோகம்
கவர்ச்சியில் கொடை
மோகத்தில் சல்லாபம்
இலக்கிய கொடை
நல்ல துணை
வாழ்க்கையின் கொடை
நல் வரவு
குடும்பத்தின் கொடை
பிரிவில்லா பாசம்
கடை வரை கொடை
அன்பு மக்கள்
முதுமையில் கொடை
கொடை கொடை கொடை
மானிட பிறப்பில் எத்தனை கொடை
இத்தனையிருந்தும் கொடையெது
உனக்கு
மண்ணை தின்று நேயம் மறந்து
அலை திரி தொலை
செல்வம் என்னும் நிலையில் பொருள்
கடயது கொடையெது?
மானிடா.......

No comments:
Post a Comment