Sunday, 21 June 2009

எது கொடை




காமம் இல் காதல் பேரு
கருவது கொடை

வலியின்றி புறம் தள்ளின்
சுகப்பிரசவமது கொடை

புவி யுணர் புலன் கொள்ளின்
உடலது கொடை

அனை புலன் இயக்கின்
உணர்வது கொடை

தாய் தந்தை உடன்பிறப்பு
இல்லத்தில் கொடை

தோழி தோழன் பகை
புறத்தோடு கொடை

தாய்பாலில் பாசமது
வளர்வது கொடை


தந்தையின் அணைப்பது
தைரியக் கொடை

இளமையில் கல்வி
அறிவியல் கொடை

பருவத்தில் காதல்
ஆனந்த கொடை

காதலில் மோகம்
கவர்ச்சியில் கொடை

மோகத்தில் சல்லாபம்
இலக்கிய கொடை

நல்ல துணை
வாழ்க்கையின் கொடை

நல் வரவு
குடும்பத்தின் கொடை

பிரிவில்லா பாசம்
கடை வரை கொடை

அன்பு மக்கள்
முதுமையில் கொடை

கொடை கொடை கொடை
மானிட பிறப்பில் எத்தனை கொடை

இத்தனையிருந்தும் கொடையெது
உனக்கு
மண்ணை தின்று நேயம் மறந்து
அலை திரி தொலை
செல்வம் என்னும் நிலையில் பொருள்

கடயது கொடையெது?
மானிடா.......

No comments:

Post a Comment