Saturday, 20 June 2009

பெண்ணே நீயா?




கலைந்த கூந்தல் கிழித்த நகக்கீறல்
தொலைந்த மோகம் அழித்த ஆசை
அலைந்த கண்கள் வலித்த தேகம்
மஞ்சனை கை குழுக்கள்
நட்புக்கு வருகை காதலுக்கு பிரியாவிடை

ஒரு நாள் பார்வை
ஒரு வார பேச்சு
ஒரு மாத மோகம்
ஒரு வரை தொடர்
இனி யென
ஒரு நாள் தீண்டல்
ஒரு வார சினுங்கள்
ஒரு மாத ஊடல்
ஒரு வரை கடத்தல்

தாயின் கருவறை கர்ப்பம்
சாமி கருவறை கர்ப்பக்கிரகம்
பெண்மையின் உணர்வு
கடவுளின் படைப்பு
மடியில் ஒரு கர்ப்பம்

தொலை வாழ்கை
கலை வாழ்க்கை
கல் வாழ்க்கை
தொடர் வாழ்கை

இன்பம் கருவென
மோகம் மழலையென
காமம் குழந்தையென
மடிதவழும் வெறும் கழுத்து

இல்லறம் வெறுமை
துறவறம் சாபம்
கன்னி கட்டாயம்
கற்ப்பு அறுவடை

ஆணும் பெண்ணும் சமத்துவம்
ஆடியில் முதல்மணம் நட்புக்கு
ஆடை தொலைத்தது ஞாபகம்
ஆறுதல் சொல்லும் கணீர் மட்டும்

விதி இல்லை
ஆதி தெரியாது
சாதி பெண்
சதி நாகரீகம்

உலகம் அலட்ச்சியம்
உறவு அறுத்து
ஊர் அவலட்ச்சணம்
ஊணம் அங்கம் மட்டும்

மனசு கற்ப்பு
உடல் மானம்
கற்பு? மானம்?
விடை எது
கடை வரை

அரை மணி மோகம்
அறை தனில் சாபம்
அடி யொடு புறம்
அகம் அது தவம்

ஒரு முறை கன்னி
வரை முறை அணுகி
மறை முறை மாற்றி
தொலை முறை பின்னி

பக்கம் நஞ்சு
பாசம் பிஞ்சு
தூக்கம் தூக்கு
தூவான அழுகை
கல்லறை வாசகம்
தொட்டில் ஆணை

பிள்ளை முகம்
முல்லை சோகம்
தொல்லை காதல்
இறுதி சபதம்

கொடுத்தவன் அப்பன்
காப்பவன் சுப்பன்
ஆள்பவன் அசுரன்
அரக்கனா ஆணினம்?

எடுத்த காப்பு
கொடுத்த சாமி
அடுத்த வாரிசு
அம்மா நீயில்லை

சொல்லாது தாய்மை
ஏற்காது பிள்ளை
அம்மா தாசி
மகன் சத்தியவான்

நீண்டநாள் சந்திப்பு
விபச்சார வழக்கு
குற்றவாளி அவள்
நீதவான் அவள்கரு

குற்றம் என்ன?
உடல் காசு
கல்வி நன்கொடைக்கு
ஆடை அவிழ்ப்பு
ஆவின் பாலுக்கு
மானம் தொலைப்பு
மகன் தோற்றத்திற்கு

மறுக்கப்படுகிறது நீதவானால்

தாய்மை தள்ளி
பிள்ளை பிரிவு
செவிலி வளர்ப்பு
உறவு மறைப்பு
குற்றங்களில் அடுத்தவை

அத்தனையும் மன்னிக்கப்பட்டு


சொன்ன சாபம்
செய்த பாவம்
இழந்த கற்ப்பு
தொலைத்த மானம்
அறுத்த உறவு
குற்றங்களில் தொடர்பவை

அடுத்தநொடி விடுதலை

சரி குற்றமென்ன
கருவறை கேட்க
தண்டனை முதல்
கரு சொல்ல
உயிர் விழ

இன்பம் மட்டும்
இணை சுகம்
நானா கரு
குற்றம் மென்கரு
தண்டனை நானே
அழி என்கரு

தாய் மடி
செய் சபதம்
கொள் பெண்மை
சும உன்கரு
இழ உன்பிள்ளை
ஈன்று கொலை
நீயே செய்

பெண் அடிமை
எப்போ உனக்கு
ஆணோடு போட்டிக்கா?
தாய்மை நீ
தவம் நீ
தெய்வம் நீ

ஆணோடு நீ சமமல்ல
அதனிலும் ஒருபடி மேல்

கற்பும் கடமையும்
உன்னோடு கட்டி
குணமும் புலனும்
உயிரோடு அடக்கி

பெண்ணென நீ
வழ்ந்திடின் வாழின்...

No comments:

Post a Comment